இலங்கை
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அறிவித்தல்

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அறிவித்தல்
இஸ்ரேலில் இருந்து இலங்கைக்கு வர விரும்பும் இலங்கையர்களுக்கு இஸ்ரேல் தூதரகம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
இஸ்ரேலில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை தொடர்ந்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நாட்டுக்கு வர விரும்புபவர்கள் எகிப்து ஊடாக நாட்டுக்கு வர முடியும்.
அவ்வாறானவர்கள், தமது விசா மற்றும் கடவுச்சீட்டுக்களுடன் தூதரகத்துக்கு வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செல்லுப்படியாகும், இஸ்ரேலிய விசாக்களை வைத்திருக்கும் இலங்கையர்களுக்கு எகிப்து வழியாக பயணிக்க 96 நாள் விசா வழங்கப்படும்.
அதற்காக 50 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படும் என இஸ்ரேல் தூதரகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இஸ்ரேலில் சுமார் 20,000 இலங்கையர்கள் பணியாற்றுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஈரானில் தற்போது, 35 இலங்கையர்கள் மாத்திரமே உள்ளனர்.
அத்துடன், இஸ்ரேலுக்கு இலங்கையர்கள் தொழில் நிமித்தம் செல்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
விடுமுறையில் வந்துள்ளவர்களுக்கு விசா கால நீடிப்பை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
போர் நிலைமை மேலும் மோசமடைந்தால், இலங்கையர்களை மீட்பதற்காக அயல் நாடுகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.