இலங்கை
மனைவிக்கு தகாத உறவு; மூக்கைக் கடித்து துப்பிய கணவன்!

மனைவிக்கு தகாத உறவு; மூக்கைக் கடித்து துப்பிய கணவன்!
இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவியை பிடித்து கணவன் மூக்கைக் கடித்து துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உத்தரபிரதேசத்தின் ஹர்தோய் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ராம் கிலாவன். இவரும் இவரது 25 வயது மனைவியும் அங்கு வாழ்ந்து வந்த நிலையில், ராமின் மனைவி வேறு ஒரு வாலிபருடன் அடிக்கடி பேசி வருவதை ராம் பார்த்துள்ளார்.
ராமின் மனைவி அடிக்கடி அந்த இளைஞரை சென்று பார்ப்பதும், உல்லாசமாக இருப்பதுமாக இருந்து வந்துள்ளார். இது நீண்ட காலமாக ராமிற்கு சந்தேகத்தை உண்டாக்கி வந்த நிலையில், ஒருநாள் தனது மனைவியை ரகசியமாக பின் தொடர்ந்து சென்றுள்ளார் ராம்.
தனது கள்ளக்காதலன் வீட்டிற்கு சென்ற ராமின் மனைவி அங்கு அவருடன் உல்லாசமாக இருந்தபோது, கையும் களவுமாக ராம் அவர்களை பிடித்துள்ளார். பின்னர் மூவருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் நடந்துள்ளது.
இதில் ஆத்திரத்தில் ராம் தனது மனைவியின் மூக்கைக் கடித்து துப்பியுள்ளார்.
இதனால் ரத்தம் வழிய அந்த பெண் அலறிய நிலையில், அக்கம்பக்கத்தினர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் பெண்ணை மீட்ட்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், ராம் கிலாவனையும் கைது செய்துள்ளனர்