இலங்கை
யாழில் உருக்குலைந்த நிலையில் முதியவரின் சடலம் மீட்பு!

யாழில் உருக்குலைந்த நிலையில் முதியவரின் சடலம் மீட்பு!
யாழ். மானிப்பாயில் உருக்குலைந்த நிலையில் முதியவர் ஒருவரது சடலம் நேற்றையதினம் மீட்கப்பட்டுள்ளது. மானிப்பாய் – வடலித்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 80வயதுடைய கந்தமுத்து புஸ்பராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்:- குறித்த முதியவர் நான்கு நாட்களுக்கு முன்னரே உயிரிழந்துள்ளார். இதனை யாரும் அவதானிக்காத நிலையில் துர்நாற்றம் வீசியது. இந்த நிலையில் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து குறித்த வீட்டுக்கு சென்ற பொலிஸார், முதியவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டதை அவதானித்தனர். சடலத்தை மீட்ட பொலிஸார் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமானைக்கு கொண்டு சென்றனர்.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமானையில் வைக்கப்பட்டுள்ளது.