Connect with us

இலங்கை

யாழில் போதைமாத்திரைகள் மற்றும் கஞ்சா கடத்தலில் ஈடுப்பட்ட இருவர் கைது!

Published

on

Loading

யாழில் போதைமாத்திரைகள் மற்றும் கஞ்சா கடத்தலில் ஈடுப்பட்ட இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் இரு வேறு பகுதிகளில் போதைமாத்திரைகள் மற்றும் கஞ்சா ஆகியவற்றுடன் இருவர் இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

160 போதை மாத்திரைகளுடன் சுதுமலை பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொ.பா.விஜயராஜா தலைமையிலான பொலிஸ் குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை குருநகர் வைத்தியசாலைக்கு முன்பாக கஞ்சா கலந்த மாவா பொதியுடன் 19 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

Advertisement

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன