Connect with us

இலங்கை

ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் தொடர்பில் விசேட வர்த்தமானி

Published

on

Loading

ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் தொடர்பில் விசேட வர்த்தமானி

 இலங்கையில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் தொற்று பரவக் கூடிய அல்லது அதிக ஆபத்துள்ள பகுதிகளாகக் குறிப்பிட்டு சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவிப்பு விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார பணிப்பாளர் நாயகம் ஹேமாலி கொத்தலாவல கடந்த 13ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

வர்த்தமானி அறிவித்தலில் பன்றிகளை அதிக ஆபத்துள்ள விலங்குகளாகவும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களில் இலங்கையின் பல்வேறு பிரதேச செயலகங்களில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளதாகவும், அது மேலும் பரவ வாய்ப்புள்ளது என்பதால் இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பிரதேச கால்நடை அலுவலரால் வழங்கப்பட்ட அனுமதியின்றி, பாதிக்கப்பட்ட அல்லது அதிக ஆபத்துள்ள பகுதிகளுக்குள் அல்லது வெளியே ஆபத்தான பன்றிகள், பன்றி இறைச்சி மற்றும் தொடர்புடைய பொருட்களை கொண்டு செல்வது, அகற்றுவது, எடுத்துச் செல்வது அல்லது அப்புறப்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் இறைச்சிக்காக பாதிக்கப்பட்ட விலங்குகளை வெட்டுவது அல்லது நேரடி விலங்கு சந்தைகளை இயக்க அதிக ஆபத்துள்ள விலங்குகளைப் பயன்படுத்துவதும் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அதி குறிப்பிடப்பட்டுள்ளது.  

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன