இலங்கை
இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்ட 85 சீனப் பிரஜைகள்

இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்ட 85 சீனப் பிரஜைகள்
நாட்டில் தங்கியிருந்தபோது கணினி குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 85 சீனப் பிரஜைகள் இந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு காவலில் வைக்கப்பட்டு, இன்று (20) விசேட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் நாடு கடத்தப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
நீதிமன்றங்களால் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட இந்த சீனப் பிரஜைகள் காவலில் வைக்கப்பட்டனர், பின்னர் அவர்களை நாடு கடத்தும் தீர்மானத்தின் அடிப்படையில் வெலிசரயில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தடுப்பு மையத்திற்கு மாற்றப்பட்டனர்.
இந்த சீனப் பிரஜைகள் 5 பஸ்களில் ஏற்றப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, கடுமையான பாதுகாப்பின் கீழ் விமானத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சீனப் பிரஜைகள் குழுவுடன் 85 பொலிஸ் அதிகாரிகள், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் 172 ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் இந்த விமானத்தில் பயணித்ததாக கட்டுநாயக்க விமான நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.