இலங்கை
மரக்கடத்தல் முறியடிப்பு

மரக்கடத்தல் முறியடிப்பு
தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரமந்தனாறு மயில்வானபுரம் அரச காட்டுப்பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் மரக்குற்றிகளைக் கடத்திய ஒருவர் தருமபுரம் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
தருமபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைவாக விசுவமடுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வீதிச்சோதனை நடவடிக்கை இந்தக் குற்றச்செயல் முறியடிக்கப்பட்டது.
சந்தேகநபரிடமிருந்து மரக்குற்றிகளைக் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட கப்ரக வாகனம் மற்றும் 12 நாவல்மரக்குற்றிகள் என்பன கைப்பற்றப்பட்டன. சந்தேகநபரை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.