Connect with us

பொழுதுபோக்கு

வங்கி ஊழியர் டூ மாடலிங், நடிகை; ஆண் குரல் என கிண்டல்: விமர்சனங்களை கடந்து சாதித்த நடிகை!

Published

on

Lavanya Njh

Loading

வங்கி ஊழியர் டூ மாடலிங், நடிகை; ஆண் குரல் என கிண்டல்: விமர்சனங்களை கடந்து சாதித்த நடிகை!

தமிழ் சின்னத்திரையின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருந்தது பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியலான இந்த சீரியலுக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த சீரியல் இந்தியாவில் பல மொழிகள் மட்டுமல்லாமல் இலங்கை மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளது. இந்த சீரியலில் முல்லையாக நடித்து முக்கியத்துவம் பெற்றவர் வி.ஜே.சித்ரா.திடீரென அவர் இறந்ததை தொடர்ந்து நடிகை காவியா முல்லையாக நடித்து வந்தார். சமீபத்தில் அவரும் சீரியலில் இருந்து விலகியதை தொடர்ந்து லாவண்யா முல்லையாக நடித்து நடித்தார். சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் நடித்திருந்த லாவண்யா, ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் குயின் ரியாலிட்டி ஷோவில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார்.சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் லாவண்யா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இதில் வெளியிடும் பதிவுகள் இணையத்தில் வைரலாவது வழக்கம். மேலும் சீரியலில் சேலையில் தோன்றினாலும் மாடர்ன் உடையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.இதனிடையே சமீபத்தில் ஒரு நேர்காணலில், தான் நடிப்புக்கு வந்தது குறித்து லாவண்யா கூறியுள்ளார். பள்ளியில்படிக்கும்போது டாக்டர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் அதற்கெல்லாம் அதிகம் படிக்க வேண்டும் என்பதால், அதை விட்டுவிட்டு, பேஷன் டெக்னாலஜி படிக்க வேண்டும் என்று விரும்பினேன். 12-ம் வகுப்பு முடிக்கும்வரை அதே ஆசையுடன் இருந்தேன். ஆனால் எனது அப்படி அது ப்ரபொஷனலாக இருக்காது என்று கூறி பேங்கிக் படிக்க வைத்தார்,பேங்கிங்கிலும் எனக்கு ஆர்வம் இருந்தது. அதனால் அந்த படிப்பை முடித்து சேலத்தில் வேலை பார்த்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த வேலையை கைவிட்ட லாவண்யா விமான பணிப்பெண் வேலைக்கு முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரது வீட்டில் சம்மதிக்காததால், அதையும் விட்டுவிட்டு, அம்மாவின் சேலை பிசினஸ்க்கு உதவியாக இருந்துள்ளார். அப்போது சேலையை கையில் வைத்துக்கொண்டு இவர், போஸ் கொடுத்து தான் பேங்கிங்கில் இருந்தபோது தனக்கு கிடைத்த நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார்.இந்த புகைப்படங்கள் ஒரு கட்டத்தில், அவர்களுக்கு பிடித்து போக, விளம்பர மாடலாக அழைத்துள்ளனர். ஆனாலும் அப்போது யாரை சந்தித்து என்ன கேட்பது என்று தெரியாமல் இருந்த லாவண்யாவை அவரது அக்கா முதல் மாடலிங் போட்டோவை எடுத்துள்ளார். அதன்பிறகு போக போக, லாவண்யா என்றால் நடிப்பு மாடலிங் செய்கிறார்கள் என்பது தெரியவந்தது. ஆனால் இப்போதும் மேடை ஏறுவது எனக்கு பதற்றமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.தொடக்கத்தில் எனது குரலை கிண்டல் செய்வார்கள். குரல் ஆண் போல் இருக்கிறது என்று சொல்வதால், மேடை ஏறி பேசுவது எனக்கு பயமாக இருக்கும். அதனால் நான் அதிகம் பேசவே மாட்டேன். ஆனால் இப்போது எல்லாம் பழகிவிட்டது. இது என் வாழ்க்கை எனக்கு பிடித்த மாதிரி தான் இருக்க முடியும் என்று கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன