இலங்கை
வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியின் கல்விக் கண்காட்சி!

வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியின் கல்விக் கண்காட்சி!
யாழ்ப்பாணம் வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியின் 2025ஆம் ஆண்டுக்கான கல்விக் கண்காட்சி, கல்லூரி அதிபர் திருமதி. கி.குலசங்கர் தலமையில் காலை 9 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை கல்லூரியில் இடம்பெற்றது.
இதில் முதல் நிகழ்வாக நிகழ்வில் விருந்தினர்கள் மலர்மாலை அணிவித்து விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்டு மங்கல சுடர்கள் ஏற்றலுடன் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமராட்சி வலயக்கல்வி அலுவலக பிரதிக் கல்விப்பணிப்பாளர் ப.அருந்தவச்செல்வன், சிறப்பு விருந்தினராக வடமராட்சி இந்துமகளிர் கல்லூரியின் ஓய்வு பெற்ற ஆசிரியர் சி.புஸ்பராசா ஆகியோர் கபந்துகொண்டு நிகழ்வை சம்பிர்தாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.
இந்நிகழ்வில் அயல் பாடசாலைகளின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.