இலங்கை
தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலி

தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலி
திருகோணமலை- கண்டி பிரதான வீதியின் 98 ஆம் கட்டை பகுதியில் இன்று (21) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கெப் ரக வாகனத்துடன், உந்துருளியொன்று மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் உந்துருளியில் பயணித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி தம்பலகாமம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் உயிரிழந்த இருவரின் சடலங்களும் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.