Connect with us

இலங்கை

யாழில் மின்கம்பத்துடன் மோதிய உழவு இயந்திரம்

Published

on

Loading

யாழில் மின்கம்பத்துடன் மோதிய உழவு இயந்திரம்

யாழ்ப்பாணம் அராலி பகுதியில் இன்று (21) உழவு இயந்திரம் ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வர்த்தக ஸ்தாபனம் ஒன்றுக்கு சொந்தமான உழவு இயந்திரம் ஒன்று வாடிக்கையாளர் ஒருவருக்கு பொருட்களை ஏற்றிச் சென்றுள்ளது.

Advertisement

இதன்போது வீதியின் குறுக்கே மாடு பாய்ந்ததால் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த மின் கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்துஇடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது மின்கம்பமானது உழவு இயந்திரத்தின் மீது விழுந்துள்ள நிலையில் சாரதி எந்தவிதமான காயங்களும் இன்றி உயிர்தப்பியுள்ளார்.

இந்நிலையில் சேதமடைந்த மின்சார இணைப்பினை சரிசெய்யும் நடவடிக்கையில் வட்டுக்கோட்டை மின்சார சபையினர் ஈடுபட்டு வருகின்றனர்.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன