Connect with us

சினிமா

கர்ப்பிணினு பார்க்காம காருக்குள் வைத்து அடி உதை!! அஸ்மிதா கணவர் விஷ்ணு கைது..

Published

on

Loading

கர்ப்பிணினு பார்க்காம காருக்குள் வைத்து அடி உதை!! அஸ்மிதா கணவர் விஷ்ணு கைது..

தமிழகத்தில் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் தான் மேக்கப் ஆர்டிஸ்ட் அஸ்மிதா. இவர் 10 ஆம் வகுப்பு படித்தப்பின் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்து சில படங்களில் நடித்தார். அதன்பின் மேக்கப் துறையில் இறங்கி தன் திறமை மற்றும் உழைப்பு மூலம் அவருக்கான ஒரு அங்கீகாரத்தை பெற்றார். மிகமுக்கிய மேக்கப் ஆர்டிஸ்ட்-ஆக இருக்கும் அஸ்மிதா, அகாடமி ஒன்றையும் நடத்தி வருகிறார்.கடந்த 2017ல் யூடியூப் பிரபலமான விஷ்ணுகுமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 2 குழந்தைகள் பிறந்தப்பின் விவாகரத்து பெற்று பிரிந்தநிலையில், அதன்பின் மீண்டும் சேர்ந்து வாழ முடிவெடுத்தனர். இதையடுத்து மீண்டும் கர்ப்பமான அஸ்மிதாவுக்கு போன மாதம் 3வது குழந்தையும் பிறந்தது. சமீபத்தில் அஸ்மிதாவின் கணவர் விஷ்ணு, தன்னுடைய நண்பரின் சகோதரியிடம், அண்ணன் என பேசி, ஆபாச மெசேஜ் செய்ததாக ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் கடந்த வாரம் அஸ்மிதாவுக்கும் விஷ்ணுவுக்கும் பிரச்சனை ஏற்பட்டு பெரியளவில் பேசுபொருளாக மாறியது. விஷ்ணு, அஸ்மிதா மீது, தன் குழந்தையை சரியாக வளர்ப்பதில்லை, எப்போதும் போனில் தான் உள்ளார் என்று புகாரளித்தார். பின் விஷ்ணு தன்னை அடித்து உடல்ரீதியாக துன்புறுத்துகிறர் என்றும் கர்ப்பமாக இருக்கும்போதே அடித்தார் என்ற ஆடியோவையும் வெளியிட்டு புகாரளித்தார்.அஸ்மிதா அளித்த புகாரின் பெயரில் 4 வழக்குகள் பதிவு செய்த போலிசார், விஷ்ணுவை கைது செய்துள்ளனர். மேலும் அஸ்மிதா அளித்த மற்றொரு புகார் மனுவில், தன் கணவர் விஷ்ணுகுமார் கடந்த மார்ச் மாதம் காரில் சென்றபோது, ஓடும் காரில் வைத்து என்னை தாக்கியதாகவும், தன் வாயை கிழித்து, பற்களை உடைத்ததாகவும் அவர் பல பெண்களுடன் தவறான உறவில் இருப்பதாகவும் கூறி புகாரளித்திருக்கிறார். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன