Connect with us

இலங்கை

போலி சமூக ஊடகப் பதிவுகள் குறித்து சி.ஐ.டி விசாரணையை கோரிய மருத்துவ அதிகாரிகள் சங்கம்

Published

on

Loading

போலி சமூக ஊடகப் பதிவுகள் குறித்து சி.ஐ.டி விசாரணையை கோரிய மருத்துவ அதிகாரிகள் சங்கம்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உத்தியோகபூர்வ பெயர், சின்னம் மற்றும் கடிதத்தலைப்பை தவறாகப் பயன்படுத்தி, சமூக ஊடகங்கள் மூலம் விநியோகிக்கப்பட்ட பல போலி ஆவணங்கள் குறித்து,

பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் அவசர விசாரணை நடத்துமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கடிதம் ஒன்றை வெளியிட்டு கோரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

குறித்த கடிதத்தில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச, தனது போலி மின் கையொப்பம் மற்றும் போலி அரச மருத்துவ அதிகாரிகள் சங்க கடிதத் தலைப்பு ஆகியவற்றைக் கொண்ட ஒரு போலி கடிதம் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை ஆணைக்குழு, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் அண்மையில் கைது செய்யப்பட்டமை தொடர்பாக போலியான மின் கையொப்பம் மற்றும் தவறான பேஸ்புக் பதிவுகள் கொண்ட ஒரு போலி கடிதம் வெளியிடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், பொறுப்பானவர்களைக் கண்டறிந்து வழக்குத் தொடர விரைவான நடவடிக்கை எடுக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்கத்தினரை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியது.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன