இலங்கை
இலங்கையில் எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம் ; வெளியான புதிய தகவல்

இலங்கையில் எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம் ; வெளியான புதிய தகவல்
எதிர்காலத்தில் எரிபொருள் விலையில் பெரிய அதிகரிப்பு அல்லது எரிபொருள் பற்றாக்குறை இருக்காது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் இன்று (23) தெரிவித்துள்ளார்.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடம் இரண்டு மாதங்களுக்கு போதுமான எரிபொருள் இருப்பு உள்ளது.
ஆகஸ்ட் வரை எரிபொருளை முன்பதிவு செய்துள்ளது. டிசம்பர் இறுதி வரை எரிபொருள் விமலைமனு கோரல் செய்ய தயாராக உள்ளது என்று பொது முகாமையாளர் கூறினார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இராணுவ நிலைமை மோசமடைந்தால், அது முழு உலகிலும் தாக்கத்தை ஏற்படுத்தும், இலங்கை அதிலிருந்து தப்பிக்க முடியாது என்றும், இராணுவ நிலைமை தணிந்தால், அது ஒரு பிரச்சினையாக இருக்காது என்றும் கூறினார்.
தற்போதைய சூழ்நிலையில், மக்கள் தேவையற்ற அச்சத்தை உருவாக்கக்கூடாது என்றும், தற்போதைய அரசாங்கம் உலகப் போக்குகளுக்கு ஏற்ப செயல்படத் தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார்.
விலைச் சூத்திரத்தின்படி முந்தைய மாத விலையின் அடிப்படையில் எரிபொருளின் விலை நிர்ணயிக்கப்படுவதால், வரும் நாட்களில் எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும், எரிபொருள் விலைகள் ஒன்று அல்லது இரண்டு ரூபாய் அதிகரிப்பது இயல்பானது என்று நெத்திகுமாரகே மேலும் கூறினார்.