Connect with us

இலங்கை

நிறைவேற்று அதிகாரம் நீக்கப்படுவது சந்தேகமே; முன்னாள் நீதியமைச்சர் தெரிவிப்பு!

Published

on

Loading

நிறைவேற்று அதிகாரம் நீக்கப்படுவது சந்தேகமே; முன்னாள் நீதியமைச்சர் தெரிவிப்பு!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையைத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீக்கும் என நான் நம்பவில்லை. அம்முறையைத் தொடர வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பும் கூட என்று முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
 

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது அவர் மேலும் தெரிவிக்கையில்;
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என சந்திரிக்கா அம்மையார் உறுதியளித்தார். அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை. பின்னர் மஹிந்தவும் வாக்குறுதி அளித்தார். அதற்கமைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படவில்லை.
நல்லாட்சிக் காலத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்குரிய அதிகாரங்கள் சில மட்டுப்படுத்தப்பட்டன. அதுவும் எமது அழுத்தங்களால் தான் நடந்தது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஜனாதபதி அநுரகுமாரதிசாநாயக்க நீக்குவார் என நான் நம்பவில்லை – என்றார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன