Connect with us

இலங்கை

யாழில் நிகழ்ந்த பரிதாபம் ; மூச்சுத் திணறலில் உயிரிழந்த 8 மாத குழந்தை

Published

on

Loading

யாழில் நிகழ்ந்த பரிதாபம் ; மூச்சுத் திணறலில் உயிரிழந்த 8 மாத குழந்தை

யாழ்ப்பாணத்தில் 8 மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தை ஒருவர் மூச்சுத் திணறலால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாவகச்சேரி, மீசாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த கேதீசன் கிஷாரா என்ற பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

Advertisement

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த குழந்தைக்கு ஏற்கனவே ஆஸ்துமா நோய் உள்ளது.

பெற்றோர் குழந்தையை அழைத்துக்கொண்டு இன்றையதினம் பூநகரிக்கு சென்றவேளை மூச்சு எடுப்பதற்கு குழந்தை சிரமப்பட்டது.

Advertisement

இந்நிலையில் பெற்றோர் குழந்தையை பூநகரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை வைத்தியர்கள் குழந்தையை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றினர்.

பின்னர் குழந்தை அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை குழந்தை உயிரிழந்தது.

Advertisement

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன