உலகம்
அமெ. தாக்குதலுக்கு முன்பே யுரேனியத்தை அகற்றிய ஈரான்

அமெ. தாக்குதலுக்கு முன்பே யுரேனியத்தை அகற்றிய ஈரான்
அமெரிக்காவின் தாக்குதலுக்கு முன்னர் ஈரான் தனது போர்டோ அணு உலையிலிருந்து மிகவும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அகற்றிவிட்டது என ஈரானிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் இரகசிய இடமொன்றுக்கு மாற்றிவிட்டது. போர்டோ அணு உலையில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை எடுக்கப்பட்ட செய்மதிப் படங்கள் போர்டோ அணு உலைக்கு அருகில் நீண்டவரிசையில் ட்ரக் வாகனங்கள் காணப்படுவதைக் காண்பித்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.