Connect with us

இலங்கை

இந்த 5 பொருட்களை தானம் செய்தால் செவ்வாய்க்கிழமையில் அதிர்ஷ்டம் தான்

Published

on

Loading

இந்த 5 பொருட்களை தானம் செய்தால் செவ்வாய்க்கிழமையில் அதிர்ஷ்டம் தான்

செவ்வாய்க்கிழமை என்பது மங்களகரமான நாளாக கருதப்படுகிறது. செவ்வாய் பகவானால் பாதிப்பு உள்ளவர்கள் இந்த நாளில் வழிபடுவது சிறப்பு.

ஜாதகத்தில் செவ்வாயின் பாதிப்பு இருந்தால் திருமண வாழ்க்கையில் பாதிப்பு, ரத்தம் தொடர்பான நோய்கள், பூமி தொடர்பான பிரச்சனைகள், வழக்குகள் ஏற்படும்.

Advertisement

இவற்றில் இருந்து விடுபட செவ்வாய் கிழமையில் செவ்வாய் பகவானை வழிபடுவது சிறப்பு. இந்த நாளில் அனுமன், முருகப் பெருமான் ஆகியோரை வழிபட்டு, அவர்களின் அருளை பெற மிகவும் உகந்த நாளாகும்.

செவ்வாய்க்கிழமையன்று வழிபாடு செய்வதுடன் சில பொருட்களை தானம் செய்வதன் மூலம் செவ்வாயின் எதிர்மறை தாக்கம் குறையும். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு அதிகரிக்கும்.

செவ்வாய் கிழமையில் குறிப்பிட்ட 5 பொருட்களை தானம் செய்வதால் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்என்பது நம்பிக்கை.

Advertisement

சிவப்பு நிற ஆடைகளை தானம் செய்வது நல்ல பலன்களைத் தரும். இதனால் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளமும் பெருகும். குறிப்பாக செவ்வாய்க்கிழமையன்று சிவப்பு நிற ஆடை தானம் செய்வதால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். 

ஹனுமனுக்கு கடலை மாவு லட்டு மிகவும் பிடிக்கும். செவ்வாய்க்கிழமை அன்று கடலை மாவு லட்டு தானம் செய்வது நல்லது.

மசூர் பருப்பு தானம் செய்வதால் மாங்கல்ய தோஷம் நீங்கும். திருமணத்தில் ஏற்படும் தடைகள் விலகும். இதனால் திருமண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும் என்று கூறப்படுகிறது.

Advertisement

செவ்வாய்க்கிழமை அன்று தேங்காய் தானம் செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதனால் நோய்களிலிருந்து விடுதலை கிடைக்கும். வெல்லம் தானம் செய்வதும் நல்லது. செவ்வாய்க்கிழமை அன்று தேங்காயுடன் சிவப்பு பூ வைத்து கோவிலுக்கு தானம் செய்ய வேண்டும்.

செவ்வாய்க்கிழமை அன்று பொருளாதார நெருக்கடியை போக்க தானம் செய்வது அவசியம். செவ்வாய்க்கிழமை அன்று கஞ்சி மற்றும் அரிசி தானம் செய்வது நல்லது. இப்படிச் செய்வதால் பொருளாதார நிலை மேம்படும். வறுமையை போக்க இந்த தானம் உதவும். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன