Connect with us

வணிகம்

ஈரான் எடுத்த அதிரடி முடிவு… எகிறும் கச்சா எண்ணெய் விலை; தங்கம் ரேட் உயருமா? நிபுணர் விளக்கம்

Published

on

C Oil

Loading

ஈரான் எடுத்த அதிரடி முடிவு… எகிறும் கச்சா எண்ணெய் விலை; தங்கம் ரேட் உயருமா? நிபுணர் விளக்கம்

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான மோதல், இதில் அமெரிக்காவின் தாக்குதல் போன்றவை பொருளாதாரத்தை எப்படி பாதிக்கக் கூடும் என்று பலருக்கு கேள்வி இருக்கும். இது குறித்த தகவல்களை பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.மத்திய கிழக்கில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது மற்றும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் தடுக்கும் அச்சுறுத்தல் போன்ற சமீபத்திய புவிசார் அரசியல் நிகழ்வுகள் பொருளாதார ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தியது என்று பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் கூறுகிறார்.உலக அளவில் 100 பேரல் கச்சா எண்ணெய்களில் சுமார் 20 பேரல் கச்சா எண்ணெய் ஹோர்முஸ் நீரிணை வழியாக வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். இதனால் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால் கச்சா எண்ணெய்யின் விலை 85 டாலரில் இருந்து 95 டாலர் வரை செல்லக் கூடும் என்று பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் உயரும்பட்சத்தில் பணவீக்கம் ஏற்படும் அபாயம் இருக்கிறது. மேலும், ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதாலும் பணவீக்கம் அதிகரிக்கும். இதையடுத்து, வரும் வாரங்களில் தங்கத்தின் விலை உயரும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளதாக ஆனந்த் சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார். இதனால் ரிசர்வ் வங்கி குறைந்த வட்டி விகிதத்தை பராமரிப்பது கடினமாக இருக்கும். இது தவிர டீசல், பெட்ரோல் மற்றும் சிலிண்டர் விலைகள் அரசாங்கத்தின் தற்போதைய லாப வரம்புகளால் பெரிய அளவில் அதிகரிக்க வாய்ப்பில்லை என்றாலும், எண்ணெய் சந்தை நிறுவனங்களின் (OMCs) பங்குகள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்று பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன