Connect with us

இலங்கை

சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் ஶ்ரீகாந்த்

Published

on

Loading

சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் ஶ்ரீகாந்த்

  போதைப்பொருள் வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரபல தமிழ் நடிகர் ஶ்ரீகாந்தை ஜூலை 7 வரை, தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement

கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்த் நீதிபதியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, தமது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பிணை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

அதோடு வெளிநாடு செல்லமாட்டேன், வழக்கு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன் என்றும் உறுதி அளித்தார்.

இருப்பினும் பிணை வழங்க மறுத்த நீதிபதி, போதைப்பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய அறிவுரை வழங்கினார்.

Advertisement

இந்நிலையில், போதைப்பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் தரப்பில் பிணை வழங்க கோரி, மனுதாக்கல் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேவேளை கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்துக்கு சிறையில் முதல் வகுப்பு வழங்க நீதிமன்றம் அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன