Connect with us

இலங்கை

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி தொடர் போராட்டம்

Published

on

Loading

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி தொடர் போராட்டம்

யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி “அணையா விளக்கு” தொடர் போராட்டம் இன்றைய தினம் (24) இரண்டாம் நாளாகவும் தொடர்கிறது.

செம்மணி பகுதியில் அமைந்துள்ள யாழ் வளைவை அண்மித்த பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இப்போராட்டம் ஆரம்பமானது.

Advertisement

நேற்று மாலை செம்மணி தொடர்பான கதை வாசிப்பும், இரவு நிகழ்வாக ஆவணப்படம் திரையிடலும் இடம்பெற்ற நிலையில் இன்றைய தினமும் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

போராட்டத்தில் ஏற்றப்பட்டுள்ள அணையா விளக்குக்கான எண்ணெய், மலர் அஞ்சலி செலுத்துவதற்கான மலர்கள் என்பவற்றை தந்து உதவுமாறு மக்களிடம் ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன