சினிமா
போட்டோஸ் எடுக்க தடைவிதித்த நடிகர் விஜய்..! விஜய் குறித்து, புஸ்ஸி ஆனந்த் கூறிய விடயம்…!

போட்டோஸ் எடுக்க தடைவிதித்த நடிகர் விஜய்..! விஜய் குறித்து, புஸ்ஸி ஆனந்த் கூறிய விடயம்…!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகராக வலம் வருபவர் விஜய் இவர் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இந்த நிலையில் ஜுன் 22 ஆம் திகதி தனது 51 வது பிறந்த நாளை கொண்டியிருந்தார். இந்த நிலையில் விஜய் குறித்து, புஸ்ஸி ஆனந்த் பகிர்ந்த விடயம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றது . மேலும் அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு பல உதவிர்கள் வழங்கபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் மூன்று மாதக்குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யவதற்கு 18 லட்சம் வழங்கியதாகவும் பின்னர் அதனை போட்டோஸ் ஏதும் எடுக்க கூடாது எனக் கண்டிப்பாக கூறியதாக புஸ்ஸி ஆனந்த் கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.மேலும் கூறும் போது “தாய்மார்கள் வயிற்றில் இருக்கும் பிள்ளைகள் கூட விஜயின் பாடலை கேட்டாலே அசையும் என்றும் கூறியுள்ளார். இதனைப்பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதுடன் “இது தான் விஜய் சேர் மனசு” என்று பதிவிட்டு வருகின்றனர்.