Connect with us

இலங்கை

போர் நிறுத்தத்திற்கு பின்னும் ஈரான் ஏவுகணைத் தாக்குதல் ; மூவர் பலி

Published

on

Loading

போர் நிறுத்தத்திற்கு பின்னும் ஈரான் ஏவுகணைத் தாக்குதல் ; மூவர் பலி

  இஸ்ரேல்-ஈரான் மோதல் நிறுத்தப்பட்டதாக அமெரிக்கா அறிவித்த சில மணி நேரங்களில் ஈரான் ஏவுகணை இஸ்ரேல் மீது தாக்குதல்கள் நடத்தியதாகவும், இதனால் இஸ்ரேலில் 3 பேர் பலியாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் இரண்டு வாரங்களாக நீடித்த ராணுவ மோதலுக்கு பிறகு, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே சண்டையை நிறுத்த ஒரு உடன்பாடு எட்டப்பட்டிருக்கலாம்.

Advertisement

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரு நாடுகளும் முழுமையான போர் நிறுத்தத்தை பின்பற்றும் என்று அறிவித்திருந்தார்.

இருப்பினும், டிரம்ப் கூறியதை ஈரான் நிராகரித்தது. அத்தகைய உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை என்றும், இஸ்ரேல் முதலில் சண்டையை நிறுத்தினால் மட்டுமே தெஹ்ரான் அதை நிறுத்தும் என்றும் ஈரான் கூறியது.

பின்னர், ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி, இன்று அதிகாலை 4 மணி வரை இஸ்ரேல் மீது தாக்குதல் நடந்ததாக தெரிவித்தார்.

Advertisement

மேலும் இஸ்ரேலில் ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று இஸ்ரேல்   தெரிவித்துள்ளது.

இந்நிலையில்  டிரம்பின் போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பு குழப்பத்தையும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தையும் மேலும் அதிகரித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன