பொழுதுபோக்கு
மாமனாரை கொல்ல சதி; வேலைக்காரனை விரட்டி அடிக்கும் மாமியார்; கல்யாணம் நடக்குமா?

மாமனாரை கொல்ல சதி; வேலைக்காரனை விரட்டி அடிக்கும் மாமியார்; கல்யாணம் நடக்குமா?
வெற்றி என் புருஷன்.. வெளியே விடுங்கள், துளசிக்குள் உருவான மனமாற்றம் – கெட்டி மேளம் இன்றைய எபிசோட் அப்டேட்கெட்டி மேளம் சீரியலின் நேற்றைய எபிசோடில் முனுசாமி வெற்றியை போட்டு அடிக்க சொல்லி இன்ஸ்பெக்டருக்கு கட்டளையிட்ட நிலையில் இன்று, ஸ்டேஷனில் வெற்றியைப் போட்டு அடுத்து கொடுமைப்படுத்த இந்த விஷயம் ஈஸ்வரமூர்த்திக்கு தெரிய வருகிறது. உடனே ஈஸ்வரமூர்த்தி இன்ஸ்பெக்டருக்கு போன் போட்டு வெற்றி என் பையன் அவன் மேல கைய வச்சீங்க சும்மா விடமாட்டேன் என்று எச்சரிக்கிறார்.வீட்டில் நடந்த விஷயம் அறிந்த அஞ்சலி கிளம்பி தனது வீட்டுக்கு வருகிறார். வெற்றி உங்க மேல இருக்க காதலால் தான் இப்படி பண்ணி இருக்காரு. அவரே நீங்க ஏத்துக்கோங்க என்று அஞ்சலி அட்வைஸ் செய்கிறார். சிவராமனும் ஆமாம்மா வெற்றி நீ வேணும்னு நினைச்சதனாலதான் இங்கு வந்து நின்னுட்டு இருந்தான்.. போலீஸ் கைது செய்து கூட்டிட்டு போயிருக்காங்க, நீ அவனோட சேர்ந்து வாழணும் அப்பதான் உன் வாழ்க்கை நல்லா இருக்கும் என்று சொல்ல துளசி யோசிக்கிறாள்.அதைத் தொடர்ந்து துளசி ஆட்டோவில் ஸ்டேஷனுக்கு வர அவளைப் பார்த்து இன்ஸ்பெக்டர் என்னமா இன்னும் வேற ஏதாச்சும் கேஸ் தரணுமா? என கேட்க வெற்றியை வெளியே எடுக்க வந்திருப்பதாக சொல்ல அனைவரும் ஷாக் ஆகின்றனர். பிறகு வெற்றியை தாறுமாறாக அடித்திருப்பதை பார்த்து துளசி அவர்களால் எப்படி நீங்கள் கைய வைக்கலாம் என்று இன்ஸ்பெக்டரிடம் கோபப்படுகிறாள். கேஸை வாபஸ் வாங்குவதாக சொல்லி வெற்றியை வெளியே விட சொல்கிறாள்.வெற்றி என்னை வெளியே எடுக்க இவங்க யாரு கேளுங்க.. யாருன்னு சொல்லாம நான் போகமாட்டேன் இங்கதான் இருப்பேன் என்று அடம் பிடிக்கிறான். துளசி என் கழுத்தில் தாலி கட்டி இருக்கீங்க.. அப்படினா நீங்க யாரு? என்றதும் வெற்றி சந்தோஷம் அடைகிறான். வெற்றியை கை தாங்கலாக பிடித்து ஆட்டோவில் அழைத்து வருகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.ராஜராஜனை கொல்ல நடக்கும் சதி.. அபிராமிக்கு வரும் ஆபத்து, கார்த்திக் செய்ய போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்கார்த்திகை தீபம், இந்த சீரியலின் நேற்றைய முளைப்பாரி நிகழ்வு நல்லபடியாக நடந்து முடிந்ததை தொடர்ந்து இன்று, ஜானகி மற்றும் மைதிலி ஆகியோர் கோவிலில் இருந்து கிளம்புவதாக சொல்ல ரேவதி இருங்க என்னுடைய கணவரை டிராப் செய்ய சொல்லுறேன் என்று சொல்கிறாள். ஆனால் ஜானகி வேண்டாம் மா நாங்க ஆட்டோவில் போறோம் என்று சொல்லி கிளம்புகிறார்கள்.இதையடுத்து சந்திரகலா, சிவனாண்டி ஆகியோர் ஏற்பாடு செய்த ரவுடிகள் அபிராமியை கடத்த அவளது வீட்டிற்குள் எகிறி குதிக்கின்றனர். அபிராமி கார்த்தியுடன் போனில் பேசி கொண்டிருக்க ரவுடிகள் உள்ளே வந்து பார்க்க அங்கு அவள் இல்லை என தெரிய வருகிறது. கார்த்தி அபிராமியை வீடு மாற சொன்னதும் தெரிய வருகிறது. வீடு மாறிய அபிராமி காரணம் கேட்க கார்த்திக் அந்த வீட்டில் இப்போதைக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்கிறான்.அடுத்து இந்த திட்டம் தோல்வியை தழுவ அதன் பிறகு குறி சொல்ல இருந்த சாமியாரை கடத்தி வேறொரு ஆளை சாமியாராக ஏற்பாடு செய்கின்றனர். ராஜராஜன் குறி கேட்கும் போது அவனை வெட்ட சொல்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.வேலைக்காரனாக வந்த கௌதம்.. கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய பாக்கியம் – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் கௌதமை வேலைக்காரனாக சண்முகம் கடைக்கு வர சொல்லிய நிலையில் இன்று, கௌதம் சண்முகத்தின் கடைக்கு வர சண்முகம் இங்க நீயும் வெட்டுக்கிளி மாதிரி ஒரு வேலை செய்யுற ஆள் தான், நானும் வேலை செய்யுற ஆள் தான் என்று சொல்லி வேலைக்காரன் போல வேலை வாங்குகிறான்.கௌதம் தனது காதலுக்காக வந்து வேலை செய்வதை பார்த்து பரணி, ரத்னா, வீரா ஆகியோருக்கு அவன் மீது நல்ல எண்ணம் உருவாகிறது. இதையடுத்து வீரா இசக்கிக்கு போன் செய்து கௌதம் வேலைக்கு வந்திருக்கும் விஷயத்தை சொல்ல இசக்கி ஷாக் ஆகிறாள். உடனே பாக்கியத்துடன் கிளம்பி வீட்டிற்கு சண்முகம் கடைக்கு வருகிறாள். இருவரும் கௌதமை பார்த்து நீ எதுக்கு இங்க வந்த? உனக்கும் வீராவிற்கும் கல்யாணம் நடக்க போவதில்லை. இனிமே நீ இங்க வராதே என்று சொல்லி விரட்டி விடுகின்றனர்.வீரா ரத்னாவிடம் இசக்கியிடம் விஷயத்தை சொன்னதை சொல்ல ரத்னா அவகிட்ட எதுக்கு டி சொன்ன? என்ன பிரச்சனை நடக்க போகுதோ என்று பதறுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.அயலிக்கு உருவான சந்தேகம்.. வர்மாவிடம் சிக்கும் கபிலன் – அயலி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்அயலி சீரியலின் நேற்றைய எபிசோடில் கபிலன் குரலை கேட்டதும் அயலிக்கு சந்தேகம் உருவான நிலையில் இன்று, அயலி ரிதிவிகாவிடம் பேசுறது யாரு என்று கேட்க அவள் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் என்று அயலியை திட்டி அனுப்புகிறாள். இதையடுத்து அயலி மொட்டை மாடிக்கு வந்து அந்த கபிலன் திரும்பவும் என் வாழ்க்கைக்குள்ள வரானோ என்று சந்தேகமாக இருப்பதாக சொல்கிறாள்.சிவா ஏன் ப்ரொபோஸ் செய்துடுவானு பயப்படுறியா என்று சிவா கேட்டு கொண்டிருக்க ஒரு கார் வந்து நிற்கிறது. இதனால் ரித்விகாவுக்கு பார்த்த மாப்பிள்ளை யார் என்று பார்க்க கீழே வர அதற்குள் கார் கிளம்பி விடுகிறது. அடுத்து அயலிக்கு உயர் அதிகாரியிடம் இருந்து போன் கால் வருகிறது, வர்மா ஒரு இடத்திற்கு வருவதாக தகவல் கிடைக்க அயலி பேண்ட் சர்டில் இங்கு கிளம்பி செல்கிறாள்.செல்லா அயலியை பார்த்து விட்டு அவளை பின்தொடர்ந்து வருகிறாள். வர்மா ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு சாப்பாட்டில் கரப்பான் பூச்சியை போட்டு பிரச்சனை செய்கிறான். இதே பாருக்கு கபிலன் ரித்விகா மற்றும் சில பெண்களுடன் வர வர்மா கபிலனை பார்த்து ஷாக் ஆகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.