Connect with us

இலங்கை

வவுனியா ஏ9 வீதியின் பரிதாப நிலை; கண்டுகொள்வார்களா அதிகாரிகள்

Published

on

Loading

வவுனியா ஏ9 வீதியின் பரிதாப நிலை; கண்டுகொள்வார்களா அதிகாரிகள்

வவுனியா ஏ9 வீதியில் பாலம் அமைக்கும் பணி தாமதமானதால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

ஏ9 வீதியில் வவுனியா மாநகர சபை மைதானத்திற்கு முன்பாக உள்ள பகுதியில் இருந்த பழைய பாலம் அகற்றப்பட்டு புதிய பாலம் அமைக்கும் பணி கடந்த ஏப்ரல் மாதம் முன்னெடுக்கப்பட்டது.

Advertisement

பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடக்கின்ற நிலையில் பாலம் பூரணமாக அமைக்கப்படாமல், அவ்வீதியூடாக பயணிப்பதில் பொதுமக்களும் வாகன சாரதிகளும் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

அவ்வீதி பிரதான வீதியாக உள்ள காரணத்தினால் அதிகமான வாகனங்கள் அந்த வீதியை பயன்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் பாலம் அமைக்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக அந்த பகுதியில் தினமும் பொதுமக்கள் பலவாறு நெருக்கடிகளை சந்திக்கின்றனர்.

Advertisement

எனவே இவ்விடயத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.   

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன