Connect with us

பொழுதுபோக்கு

14 வயதில் என்டரி, 21 வயதில் மரணம்; 6 ஆண்டுகளில் 25 படங்கள்: தேசிய விருது பெற்ற இந்த நடிகை யார் தெரியுமா?

Published

on

Monisha Unni M

Loading

14 வயதில் என்டரி, 21 வயதில் மரணம்; 6 ஆண்டுகளில் 25 படங்கள்: தேசிய விருது பெற்ற இந்த நடிகை யார் தெரியுமா?

ஒரு கதை தொடங்கும்போது இறுதிவரை சென்று முடிய வேண்டும். ஆனால் ஒரு சில கதைகள் தொடங்குவதற்கு முன்பே முடிந்துவிடுகின்றன. அந்த வகையில் வாழ்க்கையை தொடங்கிய உடனே முடிந்தது தான் நடிகை மோனிஷா உன்னியின் கதை. பல்வேறு ஆசைகளும், கனவுகளும் நிறைந்த ஒரு வாழ்க்கை, துரதிர்ஷ்டவசமாக மிகக் குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வந்தது.தென்னிந்திய சினிமாவில், சில ஆண்டுகளே வலம் வந்திருந்தாலும், மோனிஷா உன்னி இப்போதும் ரசிகர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நடிகைகளில் ஒருவராக இருக்கிறார், அவர் இல்லை என்றாலும் அவரது தாக்கம் இன்றும் ரசிகர்கள் மனதில் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகியும், மோனிஷா உன்னி இன்றும் அன்போடும், போற்றுதலோடும் நினைவுகூரப்படுகிறார்.அற்புதமான திறமைகளை தன்னகத்தே கொண்ட மோனிஷா உன்னி, மிக இளம் வயதிலேயே தென்னிந்தியத் திரையுலகின் ஆன்மாவைப் பற்றிக்கொண்டார். கேரளாவின் கோழிக்கோட்டில் பிறந்த இவர், புகழ்பெற்ற மோகினியாட்டம் கலைஞர் ஸ்ரீதேவி உன்னி மற்றும் நாராயணன் உன்னியின் மகள். கலையை பரம்பரையாகவே தனக்குள் வைத்திருந்த மோனிஷா உன்னிக்கு, ஐந்து வயதிலேயே நடனத்தின் மீது ஆழ்ந்த காதல் பிறந்தது.அவரது கலைப் பயணம் மிக இளமையிலேயே வெறும் 14 வயதில், பள்ளி மாணவியாக இருந்தபோதே, தமிழில் வெளியான ‘பாவையா’ என்ற குறும்படத்தில் நடித்தார். அவரது திறமை, புகழ்பெற்ற எழுத்தாளரும் இயக்குநருமான எம்.டி.வாசுதேவன் நாயரின் கவனத்தை ஈர்த்தது. அவர் தனது 1986 மலையாளப் படமான ‘நக்ஷதங்கள்’ படத்தில் மோனிஷா உன்னியை நடிக்க வைத்தார். அப்போது வெறும் 16 வயதே ஆன மோனிஷா உன்னி, ஒரு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினார்.அந்த படம் அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றுத் தந்தது. அந்த நேரத்தில் அந்த விருதைப் பெற்ற மிக இளையவர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். அடுத்த 6 ஆண்டுகளில், பிரியதர்ஷன், கமல், ஹரிஹரன் போன்ற புகழ்பெற்ற இயக்குநர்களுடன் இணைந்து 25 படங்களில் நடித்தார். அவர் ஏற்று நடித்த கேரக்டர்கள் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றன. இது ஒரு அரிய அழகு மற்றும் ஆழமான நடிகை என்ற அவரது புகழை உறுதிப்படுத்தியது.தமிழ்த் திரையுலகில், மோனிஷா உன்னி ‘பூக்கள் விடும் தூது’ (1987) மற்றும் ‘திராவிடன்’ (1989) ஆகிய படங்களில் நடித்தார். 1992 இல், ‘உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன்’ திரைப்படத்தில் கார்த்திக்குடன் ஒரு உணர்ச்சிகரமான கேரக்டரில் நடித்தார். அப்படத்தில் அவர் நடித்த கேரக்டர் படம் பாதியிலேயே இறந்துவிடும். இது பிற்காலத்தில் ஒரு விசித்திரமான தீர்க்கதரிசனமாக அவருக்கே நடந்தது. அவரது கடைசிப் படம் சரத்குமார் நடித்த ‘மூன்றாவது கண்’ (1993).1992 டிசம்பர் 5 அன்று, தனது தாயாருடன் காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, மோனிஷா உன்னி ஒரு சாலை விபத்தில் சிக்கினார். அவர்களது கார் கேரள அரசு பேருந்துடன் மோதியது. அப்போது 21 வயதே ஆன மோனிஷா உன்னி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது கனவுகள் நிறைவேறாமல், அவரது ஒளி மிக விரைவாக அணைந்து விட்டது. மோனிஷா உன்னியின் திடீர் மறைவு திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் சகாக்கள் அவரது இழப்பை ஏற்றுக்கொள்ள இன்றும் போராடி வருகின்றனர்.அதன் பிறகு கடந்த சில ஆண்டுகளில், அவரது மரபு மேலும் வளர்ந்துள்ளது. பலருக்கு, அவர் இளமைக்கால பிரகாசத்தின் மற்றும் நிறைவேறாத வாக்குறுதிகளின் அடையாளமாகவே திகழ்கிறார். இளமையில் உதிர்ந்த ஒரு மலராக அவர் இன்றும் போற்றப்படுகிறார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன