Connect with us

சினிமா

ஒரேவொரு விபத்தால் முகம் சிதைந்து கோமாவுக்கு சென்ற பிரபல நடிகை..தற்போதைய நிலை..

Published

on

Loading

ஒரேவொரு விபத்தால் முகம் சிதைந்து கோமாவுக்கு சென்ற பிரபல நடிகை..தற்போதைய நிலை..

திரைத்துறையில் உச்சம் தொட்ட பிரபலங்கள் சில நாட்களில் ஒன்றும் இல்லாத அளவிற்கு அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் சோகம் பேரதிர்ச்சியை கொடுக்கும். அந்தவகையில் ஒரு உச்ச நடிகைக்கு பெரும் போராட்டத்தை சந்தித்த சம்பவம் நடந்துள்ளது.திருடா திருடா படத்தில் முக்கிய ரோலில் நடித்தவர் தான் நடிகை அனு அகர்வால். 1990ல் ஆஷிகி என்ற படத்தில் நடிக்க ஆரம்பித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் நடிகை அனு அகர்வால். அடுத்தடுத்த வாய்ப்புகள் பெற்று உச்சத்தில் இருந்த நடிகை அனு அகர்வாலின் எதிர்காலத்தை ஒரே நாள் மொத்தமாக சிதைத்துள்ளது.1999ல் கார் விபத்தில் சிக்கிய அனு அகர்வால், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருக்கட்டத்தில் கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். 29 நாட்கள் சுய நினைவின்றி கோமாவில் இருந்தார். ஒரு வழியாக கண்விழித்தபோது எல்லாரும் மாறிவிட்டதாக நினைத்தார்கள்.ஆனால், விபத்தின் கோரத்தால் அவரது முகம் சிதைத்திருந்தது. நினைவாற்றலை இழந்திருந்தார். உடலில் ஒரு பாதி முடங்கி, சினிமா நடிகையாக இருந்ததும், தன் குடும்பம் குறித்தும் எதுவும் நினைவில் இல்லா சூழலில் இருந்திருக்கிறார்.அதிலிருந்து சிகிச்சை மூலமாக மீண்டு, குழந்தைப்போல் மாறினார். எல்லாத்தையும் தொடக்கத்தில் இருந்து கற்றுக்கொண்டு, பொதுவெளியில் தலைக்காட்ட ஆர்மபித்தார். யோகா மற்றும் தியானத்தின் மூலம் தன்னைத்தானே குணப்படுத்திக்கொண்டார் அனு அகர்வால்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன