Connect with us

இலங்கை

கொழும்பு துறைமுகத்தில் மீண்டும் கொள்கலன் வரிசை ; வெளியான அதிர்ச்சி காரணம்

Published

on

Loading

கொழும்பு துறைமுகத்தில் மீண்டும் கொள்கலன் வரிசை ; வெளியான அதிர்ச்சி காரணம்

கொழும்பு துறைமுகத்தில் மீண்டும் கொள்கலன் நெரிசல் உருவாகி வருவதாக கொள்கலன் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்  இன்று (25) தெரிவித்தார்.

இன்று (25) கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

Advertisement

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

அமைச்சரவை உபக் குழுவின் பரிந்துரைகளை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் பின்பற்றத் தவறியதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இலங்கை துறைமுகத்திற்குச் சொந்தமான நிறுத்துமிடத்தில் ஒரு பகுதி சமீபத்தில் நெரிசலைக் குறைக்க அனைத்து வசதிகளுடன் சுங்கத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்தாலும், இதுவரை ஒரு வாகனம் கூட குறித்த நிறுத்துமிடத்தில் அனுமதிக்கப்படவில்லை

Advertisement

எனவே, கொள்கலன் லொறி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் உட்பட பலர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மீண்டும் கொள்கலன் நெரிசல் ஏற்பட்டால், சரக்குக் கப்பல்கள் வேறு துறைமுகங்களுக்குச் செல்லும் அபாயம் உள்ளது,

மேலும் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கொள்கலன்களில் இருப்பதால் அவை காலாவதியாகும் அபாயம் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன