சினிமா
கோளாறு முத்தி திரிகிறாரா வடிவேலு? ரீ-எண்ட்ரிக்கு உதவிய சுந்தர் சி-யை வம்புழுக்கிறாரே வைகை..

கோளாறு முத்தி திரிகிறாரா வடிவேலு? ரீ-எண்ட்ரிக்கு உதவிய சுந்தர் சி-யை வம்புழுக்கிறாரே வைகை..
தமிழ் சினிமாவின் காமெடி சரவெடியாக திகழ்ந்து வைகைப்புயல் என்ற பெயரோடு அசத்தி வந்த வடிவேலு, சில ஆண்டுகளுக்கு முன் ரெட் கார்டு பிரச்சனையில் இருந்து மீண்டு வந்து திரும்பவும் நடிக்க ஆரம்பித்தார்.கடந்த 20 ஆண்டுகளுக்கு பின் சுந்தர் சி இயக்கத்தில் கேங்கர்ஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். படமும் சுமாரான வரவேற்பை பெற்றது. ஆனால் வடிவேலு இப்போது, படம் நல்லா வந்திருக்கும் சுந்தர் சி தான் கெடுத்துவிட்டார் என்று புலம்பியிருக்கிறாராம்.படத்தில் இன்னும் நிறைய காமெடி காட்சிகள் இருக்கிறது. அதையெல்லாம் சுந்தர் சி கட் செய்துவிட்டதாகவும் அதை பத்திரமாக வைத்திருப்பதாகவும் அதை படத்தில் சேர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று புலம்புகிறாராம் வடிவேலு.ஏற்கனவே இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தின் போது, இயக்குநர் தம்பி ராமையா, படத்தில் நிறைய காட்சியை கட் செய்துவிட்டார் என்று வடிவேலு புகார் கூறினார்.படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன், அதிக நேரம் ஓடுவதால் சில காட்சிகளை கட்ச் செய்ததாக தம்பி ராமையா கூறியதாக வடிவேலுவிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அதை மீறியும் வடிவேலு இவரிடம் சண்டைக்கு போனாராம்.