Connect with us

இலங்கை

மனித கழிவுகளால் நாற்றமெடுக்கும் காக்கைதீவு

Published

on

Loading

மனித கழிவுகளால் நாற்றமெடுக்கும் காக்கைதீவு

 யாழ்ப்பாணம் காக்கை தீவு பகுதிகளில் மனித மலக்கழிவுகள் , சுகாதார கழிவுகளை வயல் காணிகளில் கொட்டப்பட்டு வருவதனால் அயலில் வசிக்கும் மக்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

காக்கை தீவு பகுதியை அண்மித்த வயல் காணிகள் , அதனை சூழவுள்ள வெற்றுக்காணிகளுக்குள் இனம் தெரியாத நபர்கள் இரவு வேளைகளில் மலக்கழிவுகள் உட்பட கழிவுகளை பவுசர் வாகனத்தில் கொண்டு வந்து கொட்டி விட்டு செல்கின்றனர்.

Advertisement

அதனால் அயலில் வசிக்கும் மக்கள் தூர்நாற்றம் உள்ளிட்ட சுகாதார சீர்கேடுகளுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

நிலத்தில் கொட்டப்படும் மலக்கழிவுகள் நிலத்தடி நீருடன் கலக்கும் அபாயம் காணப்படுவதுடன் , மழை காலங்களில் வெள்ள நீருடன் கலந்து நீர் நிலைகளுடன் கலப்பதுடன், வீடுகளுக்குள் வெள்ள நீருடன் கலந்து வருவதாகவும் பிரதேசவாசிகல் கூறுகின்றனர்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க இளங்குமரனுக்கு அறிவித்ததை அடுத்து நேற்றைய தினம் (24) அப்பகுதி சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் , நிலைமைகளை நேரில் அவதானித்ததுடன் , உடனடியாக நடவடிக்கை எடுப்பேன் என அப்பகுதி மக்களுக்கு உறுதி அளித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன