இலங்கை
அரச உயர் பதவிகளுக்கு நால்வர் நியமனம்; ஒருவர் தமிழர்!

அரச உயர் பதவிகளுக்கு நால்வர் நியமனம்; ஒருவர் தமிழர்!
உயர்பதவிகளுக்கான நாடாளுமன்றக்குழு நான்கு அரச நிறுவனங்களின் தலைவர்களை நியமிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் கடந்த 20ஆம் திகதியன்று நடைபெற்ற குழுவின் கூட்டத்தின்போது இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையின் தலைவராக எஸ். நேச ராஜன் நியமிக்கப்படவுள்ளார். ஊழியர் நம்பிக்கை நிதி சபையின் தலைவராக சோமசிறி ஏகநாயக்க. இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக பி.ஏ.பி. கே.ஆர்.பமுனு ஆராச்சி, லொத்தர் சபையின் தலைவராக எம். ஆர். எச். ஸ்வர்ணதிலக ஆகியோர் நியமிக்கப்படவுள்ளனர்.