இலங்கை
தண்டப்பணமாக போலி நாணயத்தாள் கொடுத்த பெண் கைது!

தண்டப்பணமாக போலி நாணயத்தாள் கொடுத்த பெண் கைது!
போலி நாணயத்தாளை நீதிமன்றத்தில் தண்டப்பணமாகச் செலுத்த முயன்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாந்தோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
28 வயது யுவதி ஒருவருக்கு 8 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. இதன்போது குறித்த பெண் 5 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாளை தண்டப்பணமாகச் செலுத்தியுள்ளார். யுவதியால் வழங்கப்பட்ட நாணயத்தாள் போலியானது என்பதைக் காசாளர் கண்டுபிடித்த நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.