இலங்கை
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யுமாறு ஐ.நா ஆணையாளர் வலியுறுத்தல்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யுமாறு ஐ.நா ஆணையாளர் வலியுறுத்தல்!
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யுமாறு ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் வோல்கர் டர்க், கடந்த 23 ஆம் திகதி இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
இலங்கைக்கான தனது விஜயத்தை நிறைவு செய்த பின்னர் இன்று (26) பிற்பகல் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்குமாறு கோரினேன்.
“ஒரே பாலின திருமணத்தைக் குற்றமற்றதாக்க முன்மொழியும் தற்போதைய சட்டமூலம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன்.
மேலும், நிகழ்நிலை பாதுகாப்பு குறித்த சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும். ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை மீண்டும் தொடங்குவது நேர்மறையான நடவடிக்கையாகும்.
அதேபோல், பாதுகாப்பு மற்றும் பொலிஸ் சீர்திருத்தங்கள் மிகவும் முக்கியமானவை. – என்றார்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை