இலங்கை
யாழ் அரியாலையில் சித்திரவதை முகாம்; வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்!

யாழ் அரியாலையில் சித்திரவதை முகாம்; வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்!
யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மனிதப்புதைகுழி விவகாரம் தமிழ் மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில், கடந்த பெப்ரவரி மாதம் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அண்மையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன.
இதன்போது மூன்று குழந்தைகளின் மனிதச் சிதிலங்கள் உட்பட 19 மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட நிலையில், அந்தப் புதைகுழி மனிதப் புதைகுழியாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் செம்மணி மனித புதைகுழியில் புதைக்கப்பட்டது யார்? என்ற அச்சமும் தோன்றியுள்ளது.
இந்நிலையில் 1996 ஆம் ஆண்டு அரியாலை பகுதியில் 600 மேற்பட்டோர் காணாமல் போனதாக அதிர்ச்சித்தகவலும் வெளியாகியுள்ளது.
தோண்ட தோண்ட வரும் மனிதச் சிதிலங்கள் மக்களின் மங்களை ரணங்களை ஏற்படுத்திய அதேவேளை இன்னும் எத்தனை மனிதச் சிதிலங்கள் மீட்கப்படுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.