விளையாட்டு
52 பந்தில் சதம்… இங்கிலாந்தை மிரள விட்ட இந்திய இளம் வீரர்: யார் இந்த ஹர்வன்ஷ் சிங் பங்கலியா?

52 பந்தில் சதம்… இங்கிலாந்தை மிரள விட்ட இந்திய இளம் வீரர்: யார் இந்த ஹர்வன்ஷ் சிங் பங்கலியா?
19 வயதுக்குட்பட்ட இந்திய இளம் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இதில் முதலாவது ஒருநாள் போட்டி நாளை வெள்ளிக்கிழமை (ஜூன் 27) ஹோவ் கவுண்டி மைதானத்தில் நடக்கிறது. இதற்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்இதனிடையே, இந்திய இளம் அணி இங்கிலாந்து லயன் அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் ஆடியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய இளம் அணியில் கேப்டன் ஆயுஷ் மத்ரே மற்றும் வைபவ் சூர்யவன்ஷி சொற்ப ரன்னில் அவுட் ஆகி வெளியேறினர். இதனால், 13 ஓவர்களில் 91 ரன்கள் மட்டுமே எடுத்து திணறியது. இந்த இக்கட்டான சூழலில் களமாடிய ராகுல் குமார் (73 ரன்கள்) கனிஷ்க் சவுகான் (79 ரன்கள்) ஆர்.எஸ். அம்ப்ரிஷ் (72 ரன்கள்) ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்த வீரர்களுடன் ஜோடி அமைத்த இளம் வீரர் ஹர்வன்ஷ் சிங் பங்கலியா சிறப்பாக மட்டையைச் சுழற்றி 52 பந்தில் சதம் விளாசி அசத்தினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த அவர் 8 பவுண்டரி, 9 சிக்ஸர்களுடன் 103 ரன்கள் குவித்து அசத்தினார். 50 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 442 எடுத்த நிலையில், 443 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இங்கிலாந்து இளம் அணி 211 ரன்னுக்கு சுருண்டது. இதையடுத்து, இந்தியாவுக்கு அபார வெற்றி கிடைத்தது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் இளம் வீரர் ஹர்வன்ஷ் சிங் பங்கலியா. அவரை பலரும் பாராட்டி வரும் நிலையில், தற்போது ஹர்வன்ஷ் சிங் பங்கலியா குறித்த தேடல் இணையத்தில் அதிகரித்துள்ளது. அந்த வகையில், ஹர்வன்ஷ் சிங் பங்கலியாவின் பின்னணி குறித்து இங்குப் பார்க்கலாம். யார் இந்த ஹர்வன்ஷ் சிங் பங்கலியா?இந்திய இளம் அணியின் விக்கெட் கீப்பரான ஹர்வன்ஷ் சிங் பங்கலியா, குஜராத்தின் ரான் ஆஃப் கட்ச்சில் உள்ள காந்திதாம் என்ற நகரத்தைச் சேர்ந்தவர். 2017 ஆம் ஆண்டில், ஹர்வன்ஷின் தந்தையும் பிராம்ப்டனில் லாரி ஓட்டுநருமான தமன்தீப் சிங், தனது மூத்த சகோதரர் மற்றும் சகோதரி வசிக்கும் கனடாவின் டொராண்டோவிற்கு குடிபெயர முடிவு செய்தபோது, அவர் முழு குடும்பத்தையும் சவுராஷ்டிராவில் உள்ள காந்திதாமிலிருந்து மாற்ற விரும்பினார். ஆனால், ஹர்வன்ஷ் வயதுக்குட்பட்ட கிரிக்கெட்டில் நம்பிக்கைக்குரிய வகையில் செயல்பட்டு வருவதால், கிரிக்கெட்டைத் தொடர கனடா சிறந்த இடமாக பரிந்துரைக்கப்பட்டது.“எனது முழு குடும்பமும் கனடாவில் வசிப்பதால், நாங்கள் அனைவரும் ஒன்றாக வாழவும் ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் ஹர்வன்ஷ் பிடிவாதமாக இருந்தார். அவர் இந்தியாவை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த விரும்பினார். நான் இங்கே போராடுவேன் என்று அவர் என்னிடம் கூறினார். நான் சிறந்தவர்களிடையே விளையாட வேண்டும் என்றால், அது இங்கேயும் நடக்கலாம், ”என்று தமன்தீப் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் நினைவு கூர்ந்தார்.“நான் என் கால்களை கீழே வைத்து, அவர் வர வேண்டும் என்று வற்புறுத்தியிருந்தால், அவர் வருவார். ஆனால் அவருக்கு ஒரு கனவு இருந்தது, அது அவரது முதல் கனவு, ஒரு தந்தையாக, அதை உடைக்க என்னக்கு யோசனை இல்லை, ”என்று தமன்தீப் கூறுகிறார். தனது மகனை தனது கனவைத் துரத்த அனுமதித்ததால், இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான தொடர்ச்சியான பயணங்களை தமன்தீப் சமாளிக்க வேண்டியுள்ளது, அங்கு அவர் பிராம்ப்டனில் லாரிகளை ஓட்டுகிறார். “நான் இருக்கும்போது, அவருக்கு அதிக நம்பிக்கை கிடைக்கும் என்று அவர் நினைப்பதால், நான் அங்கு இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். எனவே சீசன் தொடங்கும் போது நான் பெரும்பாலும் இங்கு வருவேன். இது நிறைய பணத்தை உள்ளடக்கியது என்பதால், நான் வேலை செய்யும் நாட்களில் கடினமாக உழைக்க வேண்டும். எனவே நான் டொராண்டோவில் இருக்கும்போது, நான் பெரும்பாலும் விடுமுறை எடுக்காமல் 15-16 மணி நேரம் வேலை செய்வேன்,” என்று அவர் கூறுகிறார்.