Connect with us

பொழுதுபோக்கு

ஒரு பக்கம் ஆள் கடத்தில், மறுபக்கம் நகை கொள்ளை; அடுத்தடுத்து அரங்கேறும் குற்றங்கள்: சீரியல் அப்டேட்!

Published

on

Zee tamil ayilu anna

Loading

ஒரு பக்கம் ஆள் கடத்தில், மறுபக்கம் நகை கொள்ளை; அடுத்தடுத்து அரங்கேறும் குற்றங்கள்: சீரியல் அப்டேட்!

முத்துப்பாண்டிக்காக ஆசையாக இசக்கி செய்த விஷயம்.. திருடர்களால் காத்திருந்த அதிர்ச்சி – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கி தான் சேர்த்து வைத்த பணத்தில் முத்துப்பாண்டிக்கு நகை வாங்க ஆசைப்பட்ட நிலையில் இன்று முத்துப்பாண்டி எதுக்கு இதெல்லாம் என்று கேட்க இது என்னுடைய ஆசை என்று சொல்லி கடைக்கு கிளம்பி செல்கிறாள் இசக்கி. கடைக்குச் சென்று இவர்கள் தேடித்தேடி ஒரு அழகான செயினை வாங்குகின்றனர். முத்துபாண்டி ஸ்டேஷன் வேலையாக இருக்க இசக்கி அவனுக்கு வீடியோ கால் போட்டு செயின் பிடித்து இருக்கா என்று கேட்கிறாள்.அவன் நான் என்ன வேலை யாருக்கு நீ என்ன கேட்டுட்டு இருக்க? எனக்கு பிடிச்சிருக்கு எடு என்று சொல்கிறான். பிறகு அந்த செயினை எடுத்துக்கொண்டு வெளியே வரும்போது இரண்டு ரவுடிகள் செயினை கொள்ளை அடித்துக் கொண்டு செல்ல எல்லோரும் பதற்றம் அடைகின்றனர். முத்துப்பாண்டிக்கு விஷயம் தெரிஞ்சு அவன் கிளம்பி கடைக்கு வந்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்து ரவுடிகளை தேடத் தொடங்குகிறான். இன்னொரு பக்கம் ரவுடிகள் ஒரு வீட்டில் வந்து செட்டில் ஆகி விடுகின்றனர்.சிசிடிவி காட்சிகளை வைத்து ஆராய்ந்து எல்லாம் பிளான் பண்ணி தான் பண்ணி இருக்காங்க என்ற விஷயம் முத்துப்பாண்டி மற்றும் வீரா என இருவருக்கும் தெரிய வருகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.அடுத்தடுத்து அயலிக்கு வரும் சிக்கல்.. துப்பாக்கியால் உண்மை தெரிய வருமா? அயலி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்அயலி சீரியலின் நேற்றைய எபிசோடில் செல்லம்மா அயலியை வீட்டின் போட்டுக் கொடுத்த நிலையில் இன்று,வீட்டில் இருப்பவர்கள் அயலிடம் வாட்ச் இங்கே என்று கேட்க அயலி மேலே இருப்பதாக சொல்லி ரூமுக்கு சென்று வாட்சை கொண்டு வந்து காட்ட பாட்டி இப்போ உனக்கு போதுமா என்று செல்லம்மாவை பிடித்து திட்டுகிறார். ஆனால் செல்லம்மா இந்த முறை நீ தப்பிச்சி இருக்கலாம்.. ஆனா கண்டிப்பா நீ மாட்டுவ என்று வார்னிங் கொடுக்கிறாள்.இங்கே கபிலன் காயங்களுடன் வீட்டுக்கு வர அவனை பார்த்த செல்வநாயகி பதற்றம் அடைகிறாள். என்னாச்சு என்று கேட்க தண்ணீரில் தெரியாமல் கால் வைத்து கீழே விழுந்து விட்டதாகவும் பொய் சொல்கிறான். ஆனால் அது பொய்.. கல்யாண பொண்ணோட பப்புக்கு போய் சண்டை போட்டுட்டு வந்து இருக்கான் என்று சொல்லி அவனுக்கு அட்வைஸ் கொடுக்க கபிலன் கடுப்பாகி நிற்கிறான்.அடுத்ததாக ஜமுனா கல்யாணத்துக்கு இதுதான் சம்மதம் சொல்லி விட்டதாக சொல்லி சந்தோஷத்துடன் எல்லோரிடமும் சொல்கிறாள். அவங்க வீட்டுக்கு வரும் போது ரித்விகாவுக்கு இருக்கிற நகை எல்லாம் போதாது இன்று பேச்சு வர செல்லம்மா அயலியை கூப்பிட்டு உன் நகை எங்கே என்று கேட்கிறாள். நகை எதுக்கு என அயலி கேட்க செல்லம்மா சொன்னாதான் குடுப்பியா என்று கேட்க அயனி மேல தான் இருக்கு என்று சொல்கிறாள்.பிறகு செல்லம்மா அயலியின் பீரோவில் இருந்து நகையை எடுக்க வருகிறாள். இரவுக்குள் அயலி துப்பாக்கியை மறைத்து வைத்திருக்க அதை செல்ல பார்த்து விடுவாளா என்ற பில்டர் எகிறுகிறது. துப்பாக்கியை பார்க்க போகும் சமயத்தில் திடீரென வெளியிலிருந்து ஐயோ அம்மா என ஒரு சத்தம் கேட்க செல்லம்மா வெளியே ஓடி வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.துளசி கொடுத்த பதிலடி.. சிவராமன் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்ட வெற்றி – கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்கெட்டிமேளம் சீரியலின் நேற்றைய எபிசோடில் சீருடன் வந்த சிவராமன் லக்ஷ்மியை அவமானப்படுத்தி அனுப்பிய நிலையில் இன்று, சிவராமன், லட்சுமியை பார்த்து விட்டு துளசி வீட்டிற்கு வர மீனாட்சி ஏற்றி விட அபிராமி துளசியை பிடித்து திட்ட துளசி அவங்க எனக்கு சீர் தானே கொண்டு வந்தாங்க, அவங்களை எதுக்கு அவமானப்படுத்தி அனுப்பினீங்க? நீங்க எல்லாம் மனுஷங்களா என்று சத்தம் போடுகிறாள். அபிராமி வாய்க்கு வந்தபடி பேச துளசி இன்னொருமுறை என் குடும்பத்தை பற்றி பேசுனீங்க அவ்வளவு தான், இன்னொரு துளசியை பார்ப்பீங்க என்று பதிலடி கொடுக்கிறாள். அபிராமி அவளை இப்போவே வீட்டிற்கு அனுப்பறேன் என்று துரத்த வர வெற்றி வந்து விடுகிறான். ஏற்கனவே சிவராம் லட்சுமி எங்க வீட்டு சொத்தை அனுப்புங்க என்று தீபாவை கூப்பிட இவர்கள் அனுப்ப முடியாது என துரத்தி விட்டதை அறிந்து வெற்றி தீபாவுக்கு அட்வைஸ் செய்து அழைத்து செல்கிறான்.இங்கே சிவராமன், லட்சுமி நடந்த விஷயத்தை வீட்டில் சொல்ல ரகுவரன் இதுக்கு தான் அந்த வீட்டிற்கு போக வேண்டாம் என்று சொன்னேன் என்று சொல்கிறான். பிறகு அந்த பொருட்களை எல்லாம் தூக்கி போட போக வெற்றி தீபாவுடன் வந்து மன்னிப்பு கேட்டு அவளை விட்டு செல்கிறான். சிவராம் வீட்டிற்கு வாங்க மாப்பிள்ளை என்று கூப்பிட வெற்றி என் பொண்டாட்டியோட உரிமையோடு இந்த வீட்டிற்குள் வருவேன் என்று சொல்லி வருகிறான்.மறுபக்கம் அஞ்சலி வாட்ச் மேன் குறித்து விசாரிக்க மகேஷ் அவன் குடிகாரன் என்று சொல்லி அவனை பற்றி பேசாதே என்று சொல்கிறான். பிறகு அஞ்சலி கடைக்கு செல்லும் போது கையில் கட்டுடன் அந்த வாட்ச் மேனை பார்க்க ஷாக் ஆகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.ரவுடிகளிடம் இருந்து தப்பிய அபிராமி.. ரேவதியின் புருஷன் கார்த்திக் என அறியும் மைதிலி – அதிரடி திருப்பங்களுடன் கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமி கடத்தப்பட கோவில் நகை திருடப்பட்ட நிலையில் இன்று, கார்த்திக் வீட்டிற்கு பின்பக்கம் புதைத்து வைக்கப்பட்டு இருந்த நகையை கண்டுபிடித்து கொண்டு வருகிறான், அடுத்து அந்த நகையை கோவிலுக்கு எடுத்து கொண்டு கிளம்புகின்றனர். இன்னொரு பக்கம் சாமுண்டீஸ்வரி சந்திரகலா ஆகியோர் கோவிலில் காத்திருக்க அபிராமியை ரவுடிகள் கடத்தி சென்று ஒரு குடோனில் அடைகின்றனர்.அடுத்து இளையஜரா சாமுண்டீஸ்வரி சந்திரகலாவிடம் வந்து பேச்சு கொடுக்கிறான். நகையை கொண்டு வரும் போது நீ கூட வர மாட்டியா என்று சாமுண்டீஸ்வரி கேட்க நான் அதுக்கெல்லாம் இருக்கணும்னு அவசியம் இல்ல என்று சொல்கிறான். இதையடுத்து கோவில் குளத்தில் இருந்து கும்பாபிஷேகத்திற்காக தண்ணீர் கொண்டு வருகின்றனர்.அதை தொடர்ந்து அபிராமி கடத்தப்பட்டது அறியால் கார்த்திக், ராஜராஜன் ஆகியோர் யாக பூஜையில் அமர்ந்திருக்க இங்கே சாமுண்டீஸ்வரி ரவுடிககுக்கு போன் செய்து அபிராமியை சரியான நேரத்துக்கு கோவிலுக்கு அழைத்து வர சொல்கிறாள். இதை ஒட்டு கேட்டு விடும் அபிராமி குடோனில் இருந்து தப்பி வருகிறாள். கோவிலில் ரேவதி மைதிலியிடம் என்னுடைய கணவனை அறிமுகம் செய்து வைக்கிறேன் என்று கார்த்தியை கூப்பிட போக மைதிலி ரேவதியின் புருஷன் கார்த்திக் தான் என அறிந்து அங்கிருந்து வீட்டிற்கு கிளம்பி விடுகிறாள்.அபிராமி தப்பி ஓடி வர சந்திரகலா விஷயம் அறிந்து அவளை விட்டுடாதீங்க, எப்படியாவது பிடிங்க என்று ஆர்டர் போடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன