இலங்கை
நாடாளுமன்ற உறுப்புரிமை வழக்கில் அர்ச்சுனா எம்.பி.யின் பதவிக்கு ஆப்பு

நாடாளுமன்ற உறுப்புரிமை வழக்கில் அர்ச்சுனா எம்.பி.யின் பதவிக்கு ஆப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், தொடர்ந்தும் அந்தப் பதவியை வகிப்பதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது. அர்ச்சுனா இராமநாதன், தனது மருத்துவ அதிகாரிப் பதவியை இராஜினாமா செய்யாமல் அரசியலமைப்புக்கு முரணான வகையில் நாடாளுமன்றத் தேர்தவில் போட்டியிட்டமை நீதிமன்றத்தின் கவனத்துக்கு நேற்றுக் கொண்டுவரப்படடுள்ளது. இதையடுத்தே அவரின் நாடாளுமன்ற உறுப்புரிமை சிக்களுக்கு உரியதாக மாறியுள்ளது.
செய்யாமல் அரசியலமைப்புக்கு முரணான வகையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டமை நீதிமன்றத்தின் கவனத்துக்கு நேற்றுக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்தே, அவரின் நாடாளுமன்ற உறுப்புரிமை சிக்கலுக்கு உரியதாக மாறியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து பதவிவகிப்பதற்கான தகுதியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
அபிநவ நிவஹல் பெரமுனவின் தலைவர் ஓஷல ஹெரத் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அரச மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டே சமீபத்திய பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுவை சமர்ப்பித்ததாகக் கூறி வழக்கு தாக்கல் செய்யபட்டது.
அரசுப்பணியில் இருந்து இராஜினாமா செய்யாமல் வேட்புமனுக்களை சமர்ப்பிப்பது நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் விதிகளை மீறும் செயல் என்ற சட்ட முகாந்திரத்தின் அடிப்படையிலேயே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிபதிகள் மாயாதுன்னே கொரியா மற்றும் மஹேன் கோபல்லவா ஆகியோர் முன்னிலையில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி என்.கே. அசோக்பரன். எம்.பி. அர்ச்சுனா இராமநாதன் பொது அதிகாரியாக இருப்பதால், நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படவோ, பதவிவகிக்கவோ அரசியல்மைப்பு ரீதியாக தகுதியற்றவர் என்று வாதிட்டார். அரசியலமைப்பின் 66(இ) பிரிவை மேற்கோள்காட்டி, எம்.பி.யின் பதவி வறிதாக்கப்பட வேண்டும் என்பது அவரின் வாதமாக அமைந்தது.
நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கும் வரை அர்ச்சுனா எம். பி.யாகச் செயற்படுவதற்கு இடைக்காலக் கட்டாணையையும் அவர் கோரினார். அரசதரப்பில் முன்னிலையான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுமதிதர்மவர்தன. எம்.பி. அர்ச்சுனா இராமநாதன் இன்னும் ஒரு பொது அதிகாரியாகக் கருதப்படுகிறார் என்பதை உறுதிப்படுத்தினார்.
இதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர்களின் சமர்ப்பணங்களுக்காக வழக்கு ஜூலை மாதம் 2ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டது. மனுதாரருக்காக சட்டத்தரணி என்.கே. அசோக்பரன் மற்றும் ஷெனல் பெர்னாண்டோ ஆஜராகினர். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சார்பாக சேனானி தயாரத்ன மற்றும் நிஷாதி விக்கிரமசிங்க ஆகியோர் முன்னிலையாகினார்கள்.