இலங்கை
நாட்டில் மீண்டும் அரிசிக்கு தட்டுப்பாடா?

நாட்டில் மீண்டும் அரிசிக்கு தட்டுப்பாடா?
எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் ஒருசில அரிசி வகைகளுக்கு பற்றாக்குறை ஏற்படும் என விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் எச்சரிக்கின்றனர்.
நாட்டில் அரிசி உற்பத்தி மற்றும் கீரி சம்பா இருப்பு குறித்து அரசாங்கத்திடம் சரியான தரவு இல்லை என்று விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கீரி சம்பாவிற்கு பதிலாக 40,000 மெற்றிக் டன் அரிசியை இறக்குமதி செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் இதனை கூறியுள்ளனர்.