Connect with us

சினிமா

போதைப்பொருள் குறித்த கேள்விக்கு தகுந்த பதிலடி..! அருண் விஜயின் பேச்சால் ஷாக்கான ரசிகர்கள்!

Published

on

Loading

போதைப்பொருள் குறித்த கேள்விக்கு தகுந்த பதிலடி..! அருண் விஜயின் பேச்சால் ஷாக்கான ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் சஸ்பென்ஸ், அதிரடி, க்ரைம் எனப் பலதரப்பட்ட கதைகள் உருவாகும் காலத்தில், 2015 ஆம் ஆண்டு வெளியான “தடையறத் தாக்க” திரைப்படம் ரசிகர்களிடையே வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது. அருண் விஜய் நடிப்பிலும்,  மகிழ் திருமேனி இயக்கத்திலும் உருவான இந்த திரைப்படம், தற்கால சினிமா ரசிகர்களிடம் நல்ல மதிப்பீடுகளை பெற்றது.இந்தத் திரைப்படம் தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு திரையரங்குகளில் திரும்பவும் இன்று ஓடிக் கொண்டிருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்காக திரையரங்கத்திற்கு நேரில் வந்த நடிகர் அருண் விஜய், ஊடகவியலாளர்களை சந்தித்து சில கருத்துகளையும் தெரிவித்திருந்தார்.திரையரங்கத்தின் வெளியே காத்திருந்த ஊடகவியலாளர்கள், சமீபத்தில் தமிழ் சினிமாவில் போதைப்பொருள் வழக்குகள் தொடர்பாக ஏற்பட்ட பரபரப்புகள் குறித்த கேள்வியை நடிகர் அருண் விஜயிடம் எழுப்பினர். அதற்கு அருண் விஜய், “No comments… நான் இங்க ‘தடையறத் தாக்க’ படம் திரும்ப திரையரங்கில் ரிலீஸாவதை பார்ப்பதற்காகவே வந்தேன்.” எனக் குறிப்பிட்டார். இத்தகவல்கள் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன