இலங்கை
முன்னாள் ஜனாதிபதி ரணிலின் வெளிநாட்டு பயண விவகாரம் ; வெளியான அறிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் வெளிநாட்டு பயண விவகாரம் ; வெளியான அறிக்கை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2023 ஆம் ஆண்டில் இங்கிலாந்திலுள்ள வோல்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்திற்கு (University of Wolverhampton) விஜயம் மேற்கொண்டமை தொடர்பில் பரவி வரும் கருத்துக்கள் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் பின்வரும் விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
ரணில் விக்கிரமசிங்க 2023 ஆம் ஆண்டில் அரசாங்க நிதியை பயன்படுத்தி லண்டனுக்கு சுற்றுலா சென்று வோல்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் (University of Wolverhampton) நடைபெற்ற பட்டமளிப்பு விவழங்கும் நிகழ்வில் பங்கேற்றதாக பல தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை.
இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் மறுக்கப்படுகின்றன. இது தொடர்பில் எதிர்காலத்தில் சட்ட ரீதியாக தெளிவுப்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.