Connect with us

இந்தியா

‘இந்தியாவிலிருந்து தூரம் இருந்தாலும்… இந்தியர்களின் நெஞ்சில் உள்ளீர்கள்’ – சுபான்ஷு சுக்லாவுடன் மோடி உரையாடல்

Published

on

modi shukla

Loading

‘இந்தியாவிலிருந்து தூரம் இருந்தாலும்… இந்தியர்களின் நெஞ்சில் உள்ளீர்கள்’ – சுபான்ஷு சுக்லாவுடன் மோடி உரையாடல்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருக்கும் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி சனிக்கிழமை காணொளிக் காட்சி மூலம் உரையாடினார். அமெரிக்காவைச் சேர்ந்த ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனத்தின் தனியார் வணிக விண்வெளிப் பயணமான ஆக்சியம் -4 திட்டத்தின் ஒரு பகுதியாக சுபான்ஷு சுக்லா புதன்கிழமை அன்று விண்வெளிக்குச் சென்று வரலாற்று சாதனை படைத்தார்.இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாடலின்போது, பிரதமர் மோடி குழு கேப்டன் சுபான்ஷு சுக்லாவிடம், “நீங்கள் இந்தியாவிலிருந்து வெகு தொலைவில் இருந்தாலும், இந்தியர்களின் இதயங்களுக்கு மிக நெருக்கமாக இருக்கிறீர்கள்.உங்கள் பயணம் புதிய சகாப்தத்தின் தொடக்கத்தை குறிக்கிறது,” என்று கூறினார்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கஅதற்குப் பதிலளித்த சுபான்ஷு, “இது என்னுடைய பயணம் மட்டுமல்ல, நாட்டின் பயணமும் கூட. இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் பெருமைப்படுகிறேன்,” என்று தெரிவித்தார். இந்த உரையாடல் இந்தியாவின் விண்வெளித் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.ஜூன் 25 அன்று, சுபான்ஷு சுக்லா, மூன்று சர்வதேச விண்வெளி வீரர்களுடன் இணைந்து, NASA-வின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து SpaceX-ன் டிராகன் கேப்சூல் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) ஆக்சியம்-4 (Axiom-4) திட்டத்தின் ஒரு பகுதியாகப் பயணித்தார். இந்தச் செயல்பாடு, 1984-ஆம் ஆண்டு ரஷ்ய சோயுஸ் விண்கலத்தில் ராகேஷ் சர்மா மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்கப் பயணத்திற்குப் பிறகு, இந்திய விண்வெளி வீரர் விண்வெளிக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும்.பிரதமர் மோடி, சுபான்ஷு சுக்லாவுடன் காணொலியில் உரையாடியபோது, அவரது இந்தச் சாதனையைப் பாராட்டினார். இது ஒட்டுமொத்த தேசத்திற்கும் ஒரு பெருமைமிக்க தருணம் என்றும், இந்தியாவின் ககன்யான் திட்டத்திற்கு படிக்கல் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். சுக்லாவின் பயணம், இந்தியாவின் விண்வெளி ஆய்வு முயற்சிகளில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளது.‘டிராகன்’ விண்கலத்தின் மூலம் 28 மணி நேர பயணத்துக்குப் பிறகு சா்வதேச விண்வெளி நிலையத்தை கடந்த வியாழக்கிழமை இந்தியாவின் சுபான்ஷு சுக்லா அடைந்தார். சா்வதேச விண்வெளி நிலையத்தில் அவர் 14 நாள்கள் தங்கியிருந்து, ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளார். மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்காக தோ்வான வீரா்களில் ஒருவரான சுக்லா, அனுபவப் பயிற்சி நோக்கங்களுக்காக விண்வெளிக்குப் பயணம் செய்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன