Connect with us

டி.வி

சீதாவின் வார்த்தையால் ஏமாற்றம் அடைந்த முத்து! ஸ்ருதி அம்மாவின் வலையில் சிக்கிய ரோகிணி….

Published

on

Loading

சீதாவின் வார்த்தையால் ஏமாற்றம் அடைந்த முத்து! ஸ்ருதி அம்மாவின் வலையில் சிக்கிய ரோகிணி….

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, முத்து சீதாவைக் கூப்பிட்டு உன்ர கல்யாண விஷயத்தில எனக்கும் அக்காக்கும் பிரச்சனை வந்து கொண்டே இருக்கு என்று சொல்லுறார். அதுக்கு சீதா மாமா என்னால நீங்க ஏன் சண்டை போடுறீங்க என்று கேட்கிறார். அதுக்கு முத்து சண்டை எல்லாம் இல்ல எப்பவும் போல வாக்குவாதம் தான் அதை ஒன்னும் நீ நினைக்காத உனக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேணும் என்று சொல்லு அப்புடியே ஒரு மாப்பிள்ளையை பிடிக்கிறேன் என்கிறார்.அதனை அடுத்து சீதா தனக்கு government வேலை பாக்குற ஆள் தான் வேணும் என்கிறார். பின் முத்து சீதாவப் பாத்து நீ வேணும் என்றால் பாரு எல்லாரும் அசந்து போற மாதிரி சூப்பரான பையனைக் கூட்டிக் கொண்டு வாறன் என்கிறார். இதனைத் தொடர்ந்து சீதா மீனாவுக்கு நடந்ததெல்லாத்தையும் சொல்லி கவலைப்படுறார். அதுக்கு மீனா, நீ எதை பற்றியும் ஜோசிக்காத நான் பாத்துக்கிறேன் என்று சொல்லுறார்.அதனை அடுத்து ரோகிணி ஸ்ருதி அம்மா வீட்ட போய் நிற்கிறார். பின் ரோகிணி ஸ்ருதி அம்மா கிட்ட எனக்கு 2லட்ஷம் தரமுடியுமா என்று கேட்கிறார். அதுக்கு ஸ்ருதி அம்மா ரவியை தன்ர வீட்ட கூட்டிக்கொண்டு வாரதுக்காக கேட்ட பணத்தைக் கொடுக்க சம்மதிக்கிறார். இதைக் கேட்டவுடனே ரோகிணி சந்தோசப்படுறார்.இதனைத் தொடர்ந்து முத்து மீனாவப் பாத்து சீதாவுக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேணும் என்ற எல்லாத்தையும் நான் வடிவா கேட்டுடன் என்று சொல்லுறார். அதுக்கு மீனா சீதா சொன்னது சரி அவள் யாரை மனசில வச்சுக்கொண்டு சொன்னால் என்று கேட்டீங்களா என்கிறார். பின் முத்து சீதா வீட்ட போறார். அதனை அடுத்து சீதா தான் அருணை நினைச்சு தான் மாப்பிள்ளையை சொன்னேன் என்கிறார். அதைக் கேட்ட உடனே மீனா அம்மா சீதாவை அடிக்கிறார். பின் முத்து எதுவும் கதைக்காமல் அங்கிருந்து கிளம்புறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன