Connect with us

பொழுதுபோக்கு

12-ம் வகுப்பு தேர்வில் முதலிடம்; ஐ.ஏ.எஸ் ஆக நினைத்தவர் சினிமா ஸ்டார் ஆனது எப்படி? சுந்தர்.சி பட நடிகை ஹிஸ்ட்ரி

Published

on

Raashikanna

Loading

12-ம் வகுப்பு தேர்வில் முதலிடம்; ஐ.ஏ.எஸ் ஆக நினைத்தவர் சினிமா ஸ்டார் ஆனது எப்படி? சுந்தர்.சி பட நடிகை ஹிஸ்ட்ரி

டெல்லியில் பிறந்து,  தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை நம் ராஷி கண்ணா. விளம்பர ஏஜென்சியில் தனது பயணத்தைத் தொடங்கி, பின்னர் பாலிவுட் நடிகர் ஜான் ஆபிராமுடன் இணைந்து வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்த இந்த அழகி, இன்று ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ளார். அவரது ஈர்க்கும் தோற்றம் மட்டுமின்றி, அவரது திறமையாக நடிப்பும் ரசிகர்கள் மனதில் அவருக்கு நீங்கா இடத்தை கொடுத்துள்ளது.சிறு வயதிலிருந்தே ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் என்பதே ராஷி கண்ணாவின் மிகப்பெரிய கனவாக இருந்தது. அதற்காக தனது படிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி, லட்சிய இலக்குகளுடன் செயல்பட்டு வந்தார். ஆனால், விதி அவருக்கு வேறு ஒரு பாதையை வகுத்திருந்தது. சினிமா உலகின் கவர்ச்சியும், நடிப்பு மீதான ஆர்வமும் அவரை இந்தத் துறைக்குள் இழுத்து வந்தது. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றதுடன், கல்வியிலும் தொடர்ந்து ஜொலித்தார்.டெல்லியில் தனது பள்ளிப் படிப்பை முடித்த ராஷி கண்ணா, ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார். குடிமைப் பணிக்குச் செல்ல வேண்டும் என்ற அவரது ஆசை இருந்தபோதிலும், விதி அவரை முற்றிலும் மாறுபட்ட ஒரு சினிமா உலகிற்கு அழைத்து வந்தது. ஒரு நேர்காணலில், ராஷி கண்ணா தான் ஆரம்பத்தில் ஒரு பாடகியாக வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும், பின்னர் கல்லூரி நாட்களில் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான தயாரிப்பில் கவனம் செலுத்தியதாகவும் கூறியுள்ளார்.அவரது பாதை இறுதியாக அவர் ஒருபோதும் நினைத்திராத நடிப்புத் தொழிலை நோக்கித் திரும்பியது. நடிப்புக்கு வருவதற்கு முன்பு, ராஷி கண்ணா ஒரு விளம்பர ஏஜென்சியில் எழுத்தாளராகப் பணியாற்றினார். பின்னர் மாடலிங் துறைக்கு மாறி, அதன்பின்னர் நடிப்புத் துறையில் காலடி எடுத்து வைத்தார். 2013 ஆம் ஆண்டு வெளியான “மெட்ராஸ் கஃபே” திரைப்படம் மூலம் ஜான் ஆபிராமுக்கு ஜோடியாக நடித்து பாலிவுட்டில் அறிமுகமானார் ராஷி கண்ணா.இந்தப் படத்தில், தனது இயல்பான வசீகரத்தினாலும், அர்ப்பணிப்புடனும் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். பின்னர் 2018 ஆம் ஆண்டு நயன்தாராவுடன் இணைந்து தமிழில் “இமைக்கா நொடிகள்” திரைப்படத்தில் நடித்தார். அவரது குறிப்பிடத்தக்கப் பணிகளில் 2022 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான “சர்தார்” மற்றும் ஷாஹித் கபூருடன் இணைந்து நடித்த 2023 ஆம் ஆண்டு வெளியான “ஃபர்ஸி” என்ற வலைத் தொடரும் அடங்கும்.அதேபோல் தமிழில் வெளியான அரண்மனை 3 மற்றும் 4-வது பாகத்தில் ஹீரோயினாக நடித்த ராஷி கண்ணா கடைசியாக தமிழில், அகஷ்தியா என்ற படத்தில் நடித்திருந்தார். 11 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் தனது பயணத்தைத் தொடரும் ராஷி கண்ணா, தனது நடிப்பால் தொடர்ந்து ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். 34 வயதான அவர், தனது வரவிருக்கும் திட்டங்கள் மூலம் ரசிகர்களை மேலும் கவரத் தயாராக இருக்கிறார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன