இந்தியா
அமெரிக்காவுடன் மெகா வர்த்தக ஒப்பந்தம்; இந்தியா தயார்: நிர்மலா சீதாராமன் பேட்டி

அமெரிக்காவுடன் மெகா வர்த்தக ஒப்பந்தம்; இந்தியா தயார்: நிர்மலா சீதாராமன் பேட்டி
அமெரிக்காவின் பரஸ்பர வரிகளைத் தவிர்ப்பதற்கான (ஜூலை 9) காலக்கெடு நெருங்கி வரும் நிலையில், அமெரிக்காவுடன் பெரிய, சிறப்பான வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள இந்தியா தயாராக இருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதே சமயம், இந்திய விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களின் நலன்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் சில தெளிவான ரெட்லைன்ஸ் வகுப்பதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வரவிருக்கும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் (BTA) அமெரிக்காவிற்கு இந்திய சந்தையைத் திறக்கும் என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த சீதாராமன், “ஆம், நாங்கள் ஒரு பெரிய, நல்ல, அழகான ஒப்பந்தத்தை விரும்புகிறோம்; ஏன் கூடாது?” என்று தெரிவித்தார்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கதி ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் சீதாராமன், இந்தியாவின் வளர்ச்சி இலக்குகள் மற்றும் 2047-க்குள் விக்சித் பாரதமாக (வளர்ந்த இந்தியா) மாறும் லட்சியத்தை அடைய, வலுவான பொருளாதாரங்களுடன் விரைவில் இதுபோன்ற ஒப்பந்தங்களை மேற்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார். அமெரிக்காவுடனான BTA பேச்சுவார்த்தைகளின் போது, விவசாயம் மற்றும் பால்வளம் ஆகியவை “மிகப்பெரிய ரெட்லைன்களாக” இருந்தன. இவற்றில் மிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய அவசியம் இருந்ததாக அவர் தெரிவித்தார்.தனியார் முதலீடுகள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி:தனியார் துறையின் முதலீடுகள் குறைந்துவிட்டதாகக் கருதப்பட்ட நிலையில், நிலைமை மேம்பட்டு வருவதாக சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தார். “கடந்த ஆறு மாதங்களாக, தனியார் முதலீடுகள் மற்றும் உற்பத்தித் திறன் விரிவாக்கம் தெளிவாக நடந்து வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. தனியார் நிறுவனங்களிடம் நிச்சயமாக உபரிப் பணம் உள்ளது,” என்றார். நகர்ப்புற வளர்ச்சியில் உள்ள மந்தநிலையை மாற்ற அரசு என்ன செய்ய திட்டமிட்டுள்ளது எனக் கேட்டபோது, “ஏப்ரல் முதல், வருமான வரிச் சலுகைகள் காரணமாக நேர்மறையான நுகர்வோர் உணர்வு தெளிவாக வெளிப்படுகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.2-ம் தலைமுறை சீர்திருத்தங்கள் மற்றும் ஜிஎஸ்டி: பொருளாதாரத்திற்கு ஒரு கட்டமைப்பு உந்துதலை அளிக்கும் வகையில் பல “இரண்டாம் தலைமுறை சீர்திருத்தங்கள்” விரைவில் கொண்டுவரப்படும் என்று சீதாராமன் விளக்கினார். இதில் வங்கிகளை மேம்படுத்துவதும், அணுசக்தித் துறையில் தனியார் முதலீட்டைத் தூண்டுவதும் அடங்கும்.சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜி.எஸ்.டி) விகிதங்கள் மற்றும் அடுக்குகளை மறுசீரமைக்கும் ஒரு பகுதியாக, தற்போதைய அளவிலிருந்து ஜி.எஸ்.டி.யின் சராசரி வரி விகிதம் குறையக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். “சராசரி ஜிஎஸ்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது, நாங்கள் அதில் பணியாற்றி வருகிறோம்,” என்றார். இது பொருளாதாரத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க நுகர்வு ஊக்கியை வழங்கும் என அவர் நம்புகிறார்.ஏற்றுமதி மற்றும் முதலீட்டு சூழல்:சரக்கு ஏற்றுமதிகளுக்கு கூடுதல் ஆதரவு அளிக்க வேண்டியதன் அவசியத்தையும் நிதியமைச்சர் வலியுறுத்தினார். மேலும், அனைத்து மாநிலங்களும் முதலீட்டுச் சூழலை மேம்படுத்த வேண்டும் என்றும், “இல்லையெனில் நாட்டின் சில பகுதிகளுக்கு வரும் முதலீடுகள் மற்ற பகுதிகளுக்குச் செல்ல முடியாது” என்றும் அவர் எச்சரித்தார்.அணுசக்திக்கு முக்கியத்துவம்:ஆற்றல் திறனுக்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக சிறு, நடுத்தர, சிறிய மாடுலர் அணு உலைகளை அமைக்கும் திட்டம் உள்ளது என்று சீதாராமன் கூறினார். “இந்தியா தனது அடிப்படை ஆற்றல் தளத்தை வலுப்படுத்த வேண்டும்,” என்றார். இதற்கான சட்டத் திருத்தங்கள் விரைவில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.