இலங்கை
ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் அல்ல; அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிப்பு!

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் அல்ல; அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிப்பு!
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் விசாரணைகள் மூலம் வெளிவந்துகொண்டிருக்கின்றன என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்வின்போது எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன. எமக்கு சில சந்தேகங்கள் இருந்தன. அவை உண்மைதான் என்பது விசாரணைமூலம் தெரியவந்துகொண்டிருக்கின்றது. தாக்குதல் சம்பவம் தொடர்பில் சஹ்ரானுக்கு மேல் ஒருவர் (பிரதான சூத்திரதாரி) இருந்திருக்கக்கூடும் என நாம் சந்தேகிக்கின்றோம். இது தொடர்பிலும் தகவல்கள் கிடைத்துள்ளன. விசாரணைகள் இடம் பெறுவதால் அவற்றை வெளியிட முடியாது – என்றார்.