Connect with us

இலங்கை

கைவிடபட்ட சேவை முடக்கல் போராட்டம்!

Published

on

Loading

கைவிடபட்ட சேவை முடக்கல் போராட்டம்!

இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறிய செயற்பாடுகளை நிறுத்துவதற்கு இலங்கைப் போக்குவரத்துச் சபை துறைசார் தரப்பினருக்கு உறுதிவழங்கியதன் அடிப்படையில் நாளை முன்னெடுக்கவிருந்த சேவை முடக்கல் போராட்டம்  தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக  வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் சிவபரன் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர்; 
இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறிய செயற்பாடுகளை கண்டித்தும், அவ்வாறான செயற்பாடுகளை நிறுத்தி தனியார் பேருந்துகளின் பாதுகாப்பான சேவையை உறுதி செய்வதற்காகவும்  நாளையதினம் வடக்கில் சேவை முடக்கல் போராட்டம் இடபெறும் என கடந்தவாரம் அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

ஆனால் தற்போது இ.போ.ச, வடக்கின் ஆளுநர் மற்றும் துறைசார் தரபினர் இனிவருங்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதென்று வழங்கிய உத்தரவாதத்துக்கு அவைய குறித்த போராடம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

முன்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற கால அட்டவணைக்கு முரணான சேவை ஒன்றால் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து  யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் தனிதார் மற்றும் இ.போ.ச தரப்பினரிடையே  குழப்பநிலை ஒன்று ஏற்பட்டிருந்தது.

இதையடுத்து  பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை சுமுகமாக்கப்பட்டது. ஆனாலும் இச்சட்டவிரோதம் குறித்து துறைசார் தரப்பினருக்கும் போக்குவரத்து அதிகார சபை, துறைசார் அமைச்சு, வடக்கின் ஆளுநர் ஆகியோரிடம் முறையிட்டிருந்ததுடன், பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவுசெய்தப்பட்டது.

Advertisement

ஆனலும் எந்தவொரு தீர்வுக் கிடைக்காத நிலையில்  போராட்டம் முன்னெடுக்கப்பட இருந்த நிலையில் ஆளுநர், இலங்கை போக்குவரத்து சபை, பொலிஸார் இவ்விடையம் தொடர்பில் முன்னெடுத்த நடவடிக்கை காரணமாக இலங்கை போக்குவரத்து சபை சட்டவிரோத சேவையை இடைநிறுத்தியுள்ளதுடன் இணைந்த சேவை தொடர்பிலும் வரவுள்ள நாள்களில் இரு தரப்பினருடனும் கலந்து பேசி தீர்வை காண முயற்சிப்பதாகவும் எமக்கு உறுதி தந்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் மக்களின்  இயல்பு நிலையை சீர்குலைவதை தவிர்க்கும் வகையில் சேவை முடக்கல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது என்றும் வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன