Connect with us

இலங்கை

தமிழர் பகுதி ஒன்றில் கஞ்சாவுடன் குடும்பப் பெண் ஒருவர் கைது

Published

on

Loading

தமிழர் பகுதி ஒன்றில் கஞ்சாவுடன் குடும்பப் பெண் ஒருவர் கைது

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இன்று (30) மயில்வாகனபுரம் கொழுந்துப்புலவு பகுதியில் வீடொன்றின் பின்புறமாக மறைத்து வைத்திருக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

79 கிலோ 245 கிராம் நிறை கொண்ட கேரளா கஞ்சாவினை இவ்வாறு தர்மபுரம் பொலிஸார் மீட்கப்பட்டுள்ளதுடன், வீட்டு உரிமையாளரான 55 வயதுடைய பெண் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

கைது செய்யப்பட்ட சந்தேகநபரான விசுவமடு கொழுந்துப்புலவு பகுதியை சேர்ந்தவர் 55 வயதுடைய பெண்ணையும் மற்றும் தடையப் பொருட்கள் நாளை (01) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதி மன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி D.M.S.J . திஸ்ஷநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த கஞ்சாவானது இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன