சினிமா
மகன் இறந்த பின் இரட்டைக் குழந்தைகள்.. வெளியுலகத்துக்கே காட்டாமல் வளர்த்தாரா விவேக்?

மகன் இறந்த பின் இரட்டைக் குழந்தைகள்.. வெளியுலகத்துக்கே காட்டாமல் வளர்த்தாரா விவேக்?
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது, எந்த ஒரு முன்னணி நடிகரின் படங்கள் எடுத்தாலும் காமெடிக்கு பெரிய இடம் உள்ளது.ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரை ஜாம்பவான்களை அறிமுகப்படுத்திய இயக்குநர் பாலசந்தரால் திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகர் விவேக்.90களில் ரஜினி, கமல், விஜய், அஜித், சரத்குமார், விஜயகாந்த் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.காமெடியில் சமூகத்துக்கு தேவையான கருத்தை கூறி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். நடிகர் விவேக் கடந்த 2021ம் ஆண்டு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.இந்நிலையில், விவேக் குறித்து சில மாதங்களுக்கு முன் அவரது மனைவி சொன்ன விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.அதாவது, அவருடைய மகனின் மறைவுக்கு பின் நடிகர் விவேக் இரட்டைப் பெண் குழந்தைகளை பெற்றுக்கொண்டாராம். விவேக் இறக்கும் வரை அவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் இருக்கும் தகவலை வெளியுலகுக்கு சொன்னதில்லை.