இலங்கை
முதியவர் சடலமாக மீட்பு

முதியவர் சடலமாக மீட்பு
வீட்டில் தனித்து வாழ்ந்த முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் வல்வெட்டித்துறையில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நடந்துள்ளது.
வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுகின்றது என்று வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலை அடுத்து. சம்பவ இடத்துக்குச் சென்றபோது. வீட்டுக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது சடலம் காணப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் 60 வயதுடையவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கரவெட்டி திடீர் இறப்பு விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தார். சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.