இலங்கை
2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்
கடந்த 2 மாதங்களில் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 05 ஆம் திகதி முதல் மே 28 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இவ்வாறு கொண்டுவரப்பட்ட 1,758 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த போதைபொருட்களுடன் 25 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்டுள்ள ஹெரோயின் தொகையின் பெறுமதி 10.84 பில்லியன் ரூபா என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.